Published : 20 May 2025 06:54 AM
Last Updated : 20 May 2025 06:54 AM

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சிஎஸ்கே - ராஜஸ்தான் இன்று மோதல்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பிளே ஆஃப்சுற்​றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்​து​விட்ட சென்னை சூப்​பர் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

தோனி தலை​மையி​லான சிஎஸ்கே அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 9 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களை பெற்று 10 அணி​கள் கலந்து கொண்​டுள்ள தொடரில் கடைசி இடத்​தில் உள்​ளது. சஞ்சு சாம்​சன் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 10 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில் உள்​ளது.

இந்த சீசனில் ராஜஸ்​தான் அணிக்கு இது கடைசி ஆட்​ட​மாகும். இதனால் அந்த அணி வெற்​றி​யுடன் தொடரை நிறைவு செய்​வ​தில்கவனம் செலுத்​தக்​கூடும். பந்​து​வீச்​சில் விவேகம் இல்​லாத வீரர்​கள், பேட்​டிங்​கில் பலம் இல்லா நடு​வரிசை ஆகிய​வற்​றால் ராஜஸ்​தான் அணி தொடர்ச்​சி​யான தோல்வி​களை தவிர்க்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

புள்​ளி​கள் பட்​டியலில் அந்த அணி 9-வது இடத்​தில் இருப்​ப​தற்கு காரணம் பல்​வேறு ஆட்​டங்​களில் பந்​து​வீச்​சாளர்​கள் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாததும், பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரை மட்​டுமே நம்பி இருந்​ததும்​தான். பந்​து​வீச்​சில் அணி நிர்​வாகம் ஜோப்ரா ஆர்ச்​சரை பெரிதும் நம்​பி​யிருந்​தது. ஆனால் அவரிடம் இருந்து உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. மேலும் இந்​திய பந்​து​வீச்​சாளர்​களி​லும் நட்​சத்​திர வீரர்​கள் ஒரு​வர் கூட இடம் பெற​வில்​லை.

மும்பை அணி​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா, டிரெண்ட் போல்ட் மற்​றும் குஜ​ராத் அணி​யில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்று குறிப்​பிட்டு கூறும் வகை​யில் வலு​வான பந்​து​வீச்​சாளர்​கள் யாரும் ராஜஸ்​தான் அணி​யில் இல்​லை. பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 220 ரன்​கள் இலக்கை துரத்​திய நிலை​யில் முதல் 5 ஓவர்​களில் ராஜஸ்​தான் அணி 70-க்​கும் அதி​க​மான ரன்​களை குவித்​தது. ஆனால் இறு​தி​யில் இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. நடப்பு சீசனில் பல்​வேறு ஆட்​டங்​களில் ராஜஸ்​தான் அணி இது​போன்று தோல்வி​களை சந்​தித்து இருந்​தது.

சிஎஸ்கே இளம் வீரர்​களான ஆயுஷ் மாத்​ரே, ஷேக் ரஷித், உர்​வில் படேல், டெவால்ட் பிரே​விஸ் ஆகியோரை கொண்டு அணியை புதி​தாக கட்​டமைத்​துள்​ளது. இவர்​களது துணிச்​சலான பேட்​டிங் அணுகு​முறை சில நேர்​மறை​யான விஷ​யங்​களை அணிக்கு கொடுத்​துள்​ளது. சேம் கரண், ஜேமி ஓவர்​டன் ஆகியோர் அணி​யுடன் மீண்​டும் இணை​ய​வில்​லை. இதனால் மேலும் சில இளம் வீரர்​களுக்கு விளை​யாடும்​ லெவனில்​ இடம்​ கிடைக்​க வாய்​ப்​பு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x