Last Updated : 02 May, 2025 07:41 AM

2  

Published : 02 May 2025 07:41 AM
Last Updated : 02 May 2025 07:41 AM

தோனி செய்த தவறும்… வீணான 9 பந்துகளும்… | தொடர்ந்து 2-வது முறை​யாக லீக் சுற்றுடன் மூட்டைகட்டியது சிஎஸ்கே

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​துள்​ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனிலா​வது கடைசி லீக் ஆட்​டம் வரை தொடரை உயிர்ப்​பிப்​புடன் வைத்​திருந்​தது சிஎஸ்கே அணி. ஆனால் இம்​முறை இன்​னும் 4 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்ள நிலை​யில் இப்​போது மூட்​டைகட்​டி​யுள்​ளது. இந்த சீசனில் சிஎஸ்​கேவுக்கு நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் முடிவுரை எழு​தி​யது பஞ்​சாப் கிங்ஸ் அணி​தான்.

ஐபிஎல் வரலாற்​றில் அந்த அணி இது​போன்ற நெருக்​கடி​யான நிலையை சந்​திப்​பது இதுவே முதன்​முறை​யாகும். ஒட்​டுமொத்​த​மாக 18 சீசன்​களில் சிஎஸ்கே அணி லீக் சுற்​றுடன் வெளி​யேறு​வது இது 4-வது முறை​யாகும். 2020, 2022, 2024-ம் ஆண்​டு​களி​லும் அந்த அணி லீக் சுற்றை கடக்​க​வில்​லை.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தனது கோட்​டை​யான சேப்​பாக்​கம் மைதானத்​தில் வெற்​றிக்​கான தாகத்​துடன் விளை​யா​டாதது பெரிய பின்னடைவை ஏற்​படுத்​தி​யது. இங்கு விளை​யாடி உள்ள 6 ஆட்​டங்​களில் 5-ல் தோல்​வியை சந்​தித்​த​தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்துள்​ளது.

பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஒரே ஒரு நேர்​மை​யான விஷ​யம் என்​றால் அது சேம்கரணின் மட்டை வீச்சு மட்​டுமே. அவரது அபாரமான பேட்​டிங் காரண​மாகவே சிஎஸ்கே 190 ரன்​னை எட்ட முடிந்​தது. ஆனால் இந்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 220 ரன்​கவரை எடுப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருந்​தது.

இவற்றை முதலில் நீர்த்​துப்போவதற்கு தோனியே வழி​வகுத்து கொடுத்​தார். 18 ஓவர்​களில் சிஎஸ்கே 177 ரன்​கள் குவித்து வலு​வாக இருந்​தது. ஆனால் அடுத்த ஓவரை வீசிய யுவேந்​திர சாஹல் ஆட்​டத்தை புரட்​டிப் போட்​டார். முதல் பந்து வைடாக வீசி​னார். இதற்கு மாற்று பந்தை மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசி தோனி சிக்​ஸர் பறக்​க​விட்​டார். ஆனால் அடுத்த பந்தை சாஹல் ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீச தோனி அதை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் கேட்ச் ஆனது.

இங்​கு​தான் தோனி தவறு செய்​தார். எப்​போது பேட்​டிங்​கில் சரி​யான கணக்​கீடு செய்து விளை​யாடும் தோனி, சுழற்​பந்து வீச்​சில் பெரிய அளவில் தாக்​குதல் ஆட்​டம் தொடுப்​பவர் கிடை​யாது. முதல் பந்​தில் சிக்​ஸர் அடித்த அவர், அடுத்த பந்​தில் நிதானம் காட்​டி, சுழற்​பந்து வீச்​சில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளும் திறன் கொண்ட ஷிவம் துபேவுக்கு ஸ்டிரைக்கை கொடுத்​திருக்க வேண்​டும்.

ஆனால் அதை தோனி செய்​யத் தவறிய​தால் அந்த ஓவரில் யுவேந்​திர சாஹல் ஹாட்​ரிக் உட்பட 4 விக்​கெட்​களை கைப்​பற்றி சிஎஸ்​கே​வின் ரன் வேட்​டையை முடக்​கி​னார். அர்​ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஷிவம் துபே, நெருக்​கடி காரண​மாக தவறான ஷாட் விளை​யாடி அடுத்த பந்​தில் விக்​கெட்டை பறி​கொடுக்க சிஎஸ்கே அணி 190 ரன்​களுக்​குள் முடங்​கியது.

கடைசி 7 பந்​துகளில் 5 விக்​கெட்​களை தாரை​வார்த்​தது சிஎஸ்கே அணி. விக்​கெட்​கள் வீழ்ந்த இந்த 5 பந்​துகளும், 19.2 ஓவர்​களி​லேயே ஆட்டமிழந்ததால் அதில் எஞ்​சிய 4 பந்​துகளும் என முழு​மை​யாக 9 பந்​துகளை சிஎஸ்கே கோட்​டை​விட்​டது. ஒரு​வேளை தோனி ஆட்​ட​மிழக்​காமல் இருந்து இந்த 9 பந்​துகளை​யும் சிஎஸ்கே விளை​யாடி இருந்​தால் நிச்​ச​யம் கூடு​தலாக 15 முதல் 20 ரன்​களை சேர்த்​திருக்க முடி​யும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்​லாமல் போனது.

191 ரன்​கள் சிறப்​பான இலக்​கு​தான். ஆனால் பஞ்​சாப் கிங்ஸ் அணி அதை எந்​த​வித சிர​மும் இன்றி ஸ்ரேயஸ் ஐயர் (72), பிரப்​சிம்​ரன் சிங் (54)
ஆகியோரது தாக்​குதல் ஆட்​டத்​தால் எளி​தாக அடைந்​தது. பஞ்​சாப் அணி ஓவருக்கு சராசரி​யாக 9 ரன்​களுக்கு மேல் சீராக எடுத்​தது. வழக்​கம் போன்று எந்​த​வித தாக்​க​மும் இல்​லாத சிஎஸ்​கே​வின் பந்​து​வீச்​சும், தீவிரம் இல்​லாத பீல்​டிங்​கும் பஞ்​சாப் அணி​யின் துரத்​தலை எளி​தாக்​கியது. ரவீந்திர ஜடேஜா வீசிய 8-வது ஓவரின் 2-வது பந்தை ஸ்ரேயஸ் ஐயர் ஸ்வீப் ஷாட்​டில் பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசையை நோக்கி தூக்கி அடித்தார். அந்த பகு​தி​யில் ஷிவம் துபே பீல்​டிங் செய்த நிலை​யில் மிக நெருக்​க​மாக எல்​லைக்​கோட்டு பகு​தியை நோக்கி பாய்ந்த பந்தை ஷிவம் துபே கேட்ச் செய்ய எந்​த​வித முயற்​சி​யும் எடுக்​க​வில்​லை. மேலும் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் பிரப்​சிம்​ரன் கொடுத்த எளி​தான கேட்ச்சை பதிரனா தவற​விட்​டார். எனினும் அதன் பின்​னர் பிரப்​சிம்​ரன் அதி​கம் நேரம் களத்​தில் நிற்​க​வில்​லை.

இதன் பின்​னர் களமிறங்​கிய ஷசாங் சிங்​கும் தாக்​குல் ஆட்டம் மேற்​கொண்​டார். கடைசி 4 ஓவர்​களில் 41 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் மதீஷா பதிரனா வீசிய 17-வது ஓவரில் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியை விளாசி ஸ்ரேயஸ் ஐயர் மிரட்​டி​னார். பதிர​னா​வின் வேகத்தை சரி​யாக பயன்​படுத்தி ஸ்ரேயஸ் ஐயர் விளாசிய 2 சிக்​ஸர்​கள் அனை​வரை​யும் கவர்ந்​தது.

இந்த ஓவரில் பதிரனா தாரை​வார்த்த 17 ரன்​கள் பஞ்​சாப் அணி​யின் வெற்​றியை எளி​தாக்​கியது. ஏனெனில் கடைசி 3 ஓவர்​களில் வெற்​றிக்கு 21 ரன்களே தேவை என்ற நிலை உரு​வானது. ஜடேஜா​வின் அடுத்த ஓவரில் பவுண்​டரி, சிக்​ஸர் விளாசிய ஷசாங் சிங் 3-வது பந்தை சிக்​ஸருக்கு தூக்கி அடித்த போது எல்​லைக்​கோட்​டில் டெவால்ட் பிரே​விஸ் சாகசத்​துடன் கேட்ச் செய்​தார். 19-வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயரை, பதிரனா போல்டாக்கினார். ஆனால் ஆட்​டம் அப்​போது சிஎஸ்​கே​வின் கைகளில் இல்​லை. சிஎஸ்​கே​வின் சுழலுக்கு எதி​ராக 7 ஓவர்​களில் பஞ்​சாப் அணி 71 ரன்​களை குவித்து மிரட்​டியது.

சிஎஸ்கே அணி 10 ஆட்​டங்​களில் 8-வது தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்​துள்​ளது. சிஎஸ்​கேவுக்கு இன்​னும் 4 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்​ளது. இதில் அணி​யில் மற்ற உள்ள இளம் வீரர்​களின் திறமையைப் பரிசோ​தித்​துக் கொள்​ளலாம். மேலும் கவுர​வ​மான வெற்​றிகளு​டன் தொடரை நிறைவு செய்ய முயற்​சிக்​கலாம். சிஎஸ்கே இதற்கு முன்​னர் பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறிய 3 முறை​யும் போ​ராட்ட குணம் இருந்​தது. ஆனால் இம்​முறை அதை அரிதாககூட பார்க்க முடிய​வில்​லை. வெற்​றிக்​கான வேட்​கையோ, தாக​மும் இல்​லாமல் போனது. இங்​கிருந்​து அடுத்​த சீசனுக்​கான அணி​யை கட்டமைப்​ப​தி​லும்​ சிஎஸ்​கே அணிக்​கு பெரும்​ சவால்​ காத்​திருக்​கிறது என்​பது நிதர்​சனம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x