Published : 29 Apr 2025 06:52 AM
Last Updated : 29 Apr 2025 06:52 AM

கே.எல்.ராகுலுக்கு ‘பதிலடி’ கொடுத்த கோலி!

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஆர்சிபி நட்சத்திரமான விராட் கோலி, கே.எல்.ராகுலை கலாய்த்தார். கடந்த 10-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் நட்சத்திரம் கே.எல்.ராகுல் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் வெற்றியை ‘காந்தாரா’ பட ஸ்டைலில் பேட்டை தரையில் ஓங்கி நிறுத்தி கொண்டாடினார். இது என்னுடைய மைதானம் எனவும் அவர், கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டம் முடிவடைந்ததும் தேவ்தத் படிக்கல் மற்றும் கருண் நாயருடன் கே.எல்.ராகுல் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது கே.எல்.ராகுல் அருகே சென்ற விராட் கோலி கையில் பேட் இல்லாமல் இது என்னுடைய இடம் சென்று கையால் சைகை செய்து கலாய்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x