Published : 29 Apr 2025 06:32 AM
Last Updated : 29 Apr 2025 06:32 AM

விராட் கோலி கொடுத்த ஆதரவால் சிறப்பாக செயல்பட்டேன்: சொல்கிறார் கிருணல் பாண்டியா

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ஆர்​சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்​பிடல்ஸ் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 162 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ராகுல் 39 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​களும் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் சேர்த்​தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்​ஸிஸ் 22 ரன்​கள் சேர்த்​தனர். ஆர்​சிபி அணி சார்​பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்​வுட் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் வழங்கி ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார்.

163 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 18.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 165 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கிருணல் பாண்​டியா 47 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களுடன் 73 ரன்​களும், விராட் கோலி 47 பந்​துகளில், 4 பவுண்​டரி​களுடன் 51 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 84 பந்​துகளில் 119 ரன்​கள் சேர்த்​தது.

கிருண் பாண்​டியா களமிறங்​கும் போது பெங்​களூரு அணி 4 ஓவர்​களில் 26 ரன்​களுக்கு 3 முக்​கிய விக்​கெட்​களை இழந்​திருந்​தது. அந்த சூழ்​நிலை​யில் விராட் கோலி​யுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​ததுடன் கடைசி வரை களத்​தில் இருந்து நின்று அணியை வெற்றி பெற செய்​த​தில் கிருணல் பாண்​டியா முக்​கிய பங்கு வகித்​தார்.

ஆர்​சிபி அணிக்கு இது 7-வது வெற்​றி​யாக அமைந்​தது. 10 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 7 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 14 புள்​ளி​கள் பெற்று முதலிடத்​துக்கு முன்​னேறியது. டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு இது 3-வது தோல்​வி​யாக அமைந்​தது. 9 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 6 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று 4-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஆட்ட நாயகன் விருது வென்ற கிருணல் பாண்​டியா கூறிய​தாவது:

எனது செயல் திறன் மிக​வும் திருப்தி அளிக்​கிறது. எனது பங்கு தெளி​வாக இருந்​தது. நாங்​கள் ஆரம்​பத்​தில் மூன்று விக்​கெட்​டு​களை இழந்​தால், நான் உள்ளே சென்று ஒரு பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைப்​பதை உறுதி செய்ய வேண்​டும் என்​பதே திட்​ட​மாக இருந்​தது.

டிம் டேவிட், ஜிதேஷ் சர்​மா, ரொமேரியா ஷெப்​பர்ட் போன்ற சிறந்த பவர்​ஹிட்​டர்​கள் எங்​களிடம் உள்​ளனர். இதனால் பந்​து​ வீச்சை நொறுக்க முடி​யும். எனது பங்கை நிறைவேற்​றிய​தில் மகிழ்ச்சி அடைகிறேன். விராட் கோலி மறு​முனை​யில் இருந்​த​தால் மிக​வும் எளி​தாக இருந்​தது. முதல் 20 பந்​துகள் அசவு​கரியமாக இருந்​தது.

ஆனால் அவர், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்​தார். இதனால் எனது ஆட்​டத்தை திரும்​பப் பெற்​றேன். அந்த வகை​யில் விராட் கோலியை பாராட்ட வேண்​டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் நான் எப்​போதும் சிக்​க​ன​மாக வீசக்கூடியவன்தான். ஒரு பந்​து​வீச்​சாள​ராக, நான் எப்​போதும் ஒரு படி மேலே இருக்க விரும்​பு​கிறேன். எனது பந்​து​வீச்சு வேகத்​தின் மாறு​பாடு​களை பார்த்​தால் அது தெரி​யும். பேட்​ஸ்​மேன்​களின் பலத்தை அறிந்​து, அதை எனக்கு சாதக​மாக பயன்​படுத்த முயற்​சிக்​கிறேன்.

காலப்​போக்​கில், பேட்​ஸ்​மேன்​களின் திறனும், டெக்​னிக்​கும் மேம்​பட்டு வரு​கிறது. இதனால் ஒரு பந்​து​வீச்​சாள​ராக ஒரு படி மேலே இருக்க வேண்​டும் என்​பதை நான் உணர்ந்​துள்​ளேன். எனது ஆயுதக் களஞ்​சி​யத்​தில் என்ன இருக்​கிறது என்​பதை பேட்​ஸ்​மேன்​கள் யூகித்​துக் கொண்டே இருக்க வேண்​டும் என்று நான் விரும்​பு​கிறேன்​. இவ்​வாறு கிருணல்​ பாண்​டி​யா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x