Published : 26 Apr 2025 06:11 AM
Last Updated : 26 Apr 2025 06:11 AM

​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை

புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே 22-ம் தேதி தென் கொரி​யா​வில் நடை​பெற உள்ள ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் தொடரில் பங்​கேற்க உள்​ள​தால் தன்​னால் கலந்​து​கொள்ள முடி​யாது என்று அர்​ஷத் நதீம் விளக்​கமளித்​திருந்​தார்.

இதற்​கிடையே கடந்த செவ்​வாய்​கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் உள்ள சுற்​றுலாதலத்​தில் தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூடு தாக்​குதலில் 2 வெளி​நாட்​டினர் உட்பட 26 பேர் கொல்​லப்​பட்​டனர். இது நாடு முழு​வதும் பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது. இத்​தகைய சூழலில் பாகிஸ்​தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​ததை சிலர் சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சித்​தனர்.

இந்​நிலை​யில் இந்த விமர்​சனங்​களுக்கு நீரஜ் சோப்ரா எக்ஸ் தளத்​தில் விளக்​கம் அளித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கிளாசிக் போட்​டி​யில் பங்​கேற்க அர்​ஷத் நதீ​முக்கு நான் அழைப்பு விடுத்​தது குறித்து அதி​கம் பேசப்​படு​கிறது, அதில் பெரும்​பாலானவை வெறுப்பு மற்​றும் துஷ்பிரயோக​மாக உள்​ளது. என் குடும்​பத்​தைக் கூட அவர்​கள் விட்​டு​வைக்​க​வில்​லை.

அர்​ஷத்​துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிட​மிருந்து மற்​றொரு விளை​யாட்டு வீரருக்கு சென்​றது. இதில் அதி​க​மாகவோ, குறை​வாகவோ எது​வும் இல்​லை. நீரஜ் சோப்ரா கிளாசிக்​கின் நோக்​கம் சிறந்த விளை​யாட்டு வீரர்​களை இந்​தி​யா​வுக்​குக் கொண்​டு​வரு​வதும், நம் நாடு உலகத் தரம் வாய்ந்த விளை​யாட்டு நிகழ்​வு​களின் தாயக​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான்.

பஹல்​காமில் தீவிர​வாத தாக்​குதல் நடை​பெறு​வதற்கு இரண்டு நாட்​களுக்கு முன்பு போட்​டிகளில் பங்​கேற்க வரு​மாறு அனைத்து விளை​யாட்டு வீரர்​களுக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது. கடந்த 48 மணி நேரத்​தில் நடந்த எல்​லா​வற்​றிற்​கும் பிறகு, என்​.சி கிளாசிக்​கில் அர்​ஷத் பங்​கேற்​பது முற்​றி​லும் கேள்விக்​குறி​யாக இருந்​தது. எனது நாடும் அதன் நலன்​களும் எப்​போதும் முதன்​மை​யாக இருக்​கும்.

தீவிர​வாத தாக்​குதலில் தங்​களது உறவினர்களை இழந்து தவிப்​பவர்​களு​டன் எனது எண்​ணங்​களும் பிரார்த்​தனை​களும் உள்​ளன. நடந்த சம்​பவத்​தால் ஒட்​டுமொத்த தேசத்​துட​னும் சேர்த்து நானும் காய​மும் கோப​மும் அடைகிறேன். நம் நாட்​டின் பதில், ஒரு தேச​மாக நமது வலிமை​யைக் காண்​பிக்​கும் மற்​றும் நீதி வழங்​கப்​படும் என்று நம்​பு​கிறேன்.

பல ஆண்​டு​களாக எனது நாட்டை பெரு​மை​யுடன் சுமந்து வரு​கிறேன், எனவே எனது நேர்மை கேள்விக்​குள்​ளாக்​கப்​படு​வதைப் பார்ப்​பது வேதனையளிக்​கிறது. எந்​தக் காரண​மும் இல்​லாமல் என்​னை​யும் என் குடும்​பத்​தை​யும் குறிவைக்​கும் மக்​களிடம் நான் விளக்க வேண்​டி​யிருப்​பது எனக்கு வேதனையளிக்​கிறது. நாங்​கள் எளிய மக்​கள், தயவுசெய்து எங்​களை வேறு எது​வாக​வும் காட்ட வேண்​டாம். ஊடகங்​களின் சில பிரிவு​கள் என்​னைச் சுற்றி பல தவறான கதைகளை உரு​வாக்​கி​யுள்​ளன, ஆனால் நான் பேச​வில்லை என்​ப​தால், அது உண்​மை​யாகி​வி​டாது. மக்​கள் எவ்​வாறு கருத்​துக்​களை மாற்​றுகிறார்​கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வதும் எனக்கு கடின​மாக உள்​ளது. இவ்​வாறு நீரஜ் சோப்​ரா கூறியுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x