Published : 24 Apr 2025 05:00 AM
Last Updated : 24 Apr 2025 05:00 AM

தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஐபிஎல் வீரர்கள் அஞ்சலி!

ஹைதராபாத்: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். மேலும், போட்டி தொடங்கும் முன்பு தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்திருந்தது. மேலும், போட்டியின் முடிவில் பயன்படுத்தப்படும் பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டங்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x