Published : 24 Apr 2025 04:52 AM
Last Updated : 24 Apr 2025 04:52 AM

டெல்லிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி: லக்னோ கேப்டன் பந்த்

லக்னோ: டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் 20 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​த​தால் தோல்வி கண்​டோம் என்று லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் தெரி​வித்​தார்.

டெல்​லி, லக்னோ அணி​களுக்கு இடையி​லான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்​தினம் லக்னோ மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில் டெல்லி அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது.

முதலில் விளை​யாடிய லக்னோ அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்​தது. எய்​டன் மார்​கிரம் 52, மிட்​செல் மார்ஷ் 45, ஆயுஷ் பதோனி 36, டேவிட் மில்​லர் 14, நிக்​கோலஸ் பூரன் 9, அப்​துல் சமத் 2 ரன்​கள் எடுத்​தனர்.

டெல்லி அணி தரப்​பில் முகேஷ் குமார் 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். மிட்​செல் ஸ்டார்க், சமீரா ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர்.

பின்​னர் 160 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய டெல்லி அணி 17.5 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 161 ரன்​கள் குவித்து வெற்றி கண்​டது. அபிஷேக் போரல் 51, கருண் நாயர் 15 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கே.எல். ராகுல் 57, அக்​சர் படேல் 34 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஆட்​ட​நாயக​னாக டெல்லி அணி​யின் முகேஷ் குமார் தேர்​வா​னார்.

இதன்​மூலம் டெல்லி அணி 8 போட்​டிகளில் விளை​யாடி 6 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளது. மாறாக லக்னோ அணி 9 போட்​டிகளில் விளை​யாடி 5 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​களைப் பெற்று 6-ம் இடத்​தில் உள்​ளது.

இந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தது குறித்து லக்னோ அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் கூறிய​தாவது:

இந்த ஆட்​டத்​தில் நாங்​கள் 20 ரன்​கள் குறை​வாக எடுத்​தோம் என்று நினைக்​கிறேன். அதனால்​தான் தோல்வி கண்​டோம். முதல் 10 ஓவர் வரை எங்​களது ரன்​ரேட் அபார​மாக இருந்​தது. ஆனால் நடு ஓவர்​களில் டெல்லி அணி​யினர் சிறப்​பாக பந்​து​வீசி எங்​களைக் கட்​டுப்​படுத்தி விட்​டனர்.

இந்​தப் போட்​டி​யில் டாஸ் மிக​வும் முக்​கிய பங்கு வகித்​தது. லக்னோ ஆடு​கள​மானது, எப்​போதுமே 2-வ​தாக களம் இறங்​குபவர்​களுக்கு சாதக​மாக இருக்​கிறது. லக்னோ ஆடு​கள​மானது, முதலில் பேட்​டிங் செய்​யும் போது பந்​து​வீச்​சாளர்​களுக்கு சாதக​மாக​வும், 2-வது இன்​னிங்​சின் போது பேட்​ஸ்​மேன்​களுக்கு சாதக​மாக​வும் இருக்​கிறது.

இந்த ஆட்​டத்​தி​லும் அதே நிலை​தான் ஏற்​பட்​டது. இந்​தத் தோல்​வியி​லிருந்து நாங்​கள் பாடம் கற்​றுக்​கொள்ள வேண்​டும். இந்​தப் போட்​டி​யின்​போது நான் ஏழாவ​தாக களமிறங்​கியது ஏன் என்று கேள்வி கேட்​கின்​றனர். நான் 7-வது வரிசை​யில் விளை​யாடு​வதற்கு காரணம் இருக்​கிறது. அப்​துல் சமதை முன்​கூட்​டியே களம் இறக்க முடிவு செய்​தோம். அதன் பிறகு டேவிட் மில்​லர் வரவேண்​டிய நிலை ஏற்​பட்​டது. அதனால்​தான் 7-வது இடத்​தில் இறங்கி நான் விளை​யாடினேன். போட்​டியை வெல்​வதற்​குரிய எங்​கள் சிறந்த லெவனை கண்​டு​பிடிக்​க வேண்​டும்​. இவ்​வாறு ரிஷப்​ பந்​த்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x