Published : 21 Apr 2025 08:34 AM
Last Updated : 21 Apr 2025 08:34 AM
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 35-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது.
இதைத் தொடர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம், ஐபிஎல் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT