Published : 18 Apr 2025 06:39 AM
Last Updated : 18 Apr 2025 06:39 AM

தென் ஆப்பிரிக்கா போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். 6 வீரர்கள் பங்கேற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 84.52 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் டவுவ் ஸ்மித் (82.44) 2-வது இடமும், டன்கன் ராபர்ட்சன் (71.22) 3-வது இடமும் பிடித்தனர். தென் ஆப்பிரிக்க போட்டியை தொடர்ந்து வரும் மே 16-ம் தேதி தோகாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தொடரில் கலந்து கொள்கிறார் நீரஜ் சோப்ரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x