Published : 18 Feb 2025 07:37 AM
Last Updated : 18 Feb 2025 07:37 AM

வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை அணி

சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எஸ்பி சென்னை 25-20, 25-23, 25-20 என்ற செட் கணக்கில் பாண்டிச்சேரியையும், மத்திய தலைமைச் செயலக அணி 16-25, 25-17, 19-25, 25-20 16-14, என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி கொச்சி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

மகளிர் பிரிவு அரை இறுதியில் ஆர்எஸ்பி சென்னை 25-8, 25-11, 25-5 என்ற செட் கணக்கில் டெல்லி அணியையும், ஆர்எஸ்பி பெங்களூரு 25-15, 25-7, 25-13 என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி கொல்கத்தா அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு பிரிவிலும் இன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x