Published : 09 Feb 2025 05:47 AM
Last Updated : 09 Feb 2025 05:47 AM
கொல்கத்தா: ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின. இதில், சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
21-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத் வாத்திடம் கிராஸை பெற்ற வில்மர் ஜோர்டான் கில், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக இருந்தபடி அடித்த பந்து கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் சென்னையின் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் டேனியல் சிமா சுகவு அசத்தலாக கோல் அடிக்க சென்னையின் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சென்னையின் எஃப்சி அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது.
20 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எஃப்சி அணி 5 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளுடன் 21 புள்ளிகள் பெற்று ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது.
நடப்பு சசீசனில் கடந்த டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு தற்போது சென்னையின் எஃப்சி அணி பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT