Published : 09 Feb 2025 02:34 AM
Last Updated : 09 Feb 2025 02:34 AM

சென்னையில் பிப்.14-ல் கோல்ஃப் போட்டி

சென்னை: ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கேபிடல், மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 ஆகியவை இணைந்து, சென்னை கோல்ஃப் லீக் 2025 போட்டியை வரும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் மைதானத்தில் நடத்த உள்ளன.

இரண்டு அமைப்புகளும் மேற்கொண்டுவரும் சமூக சேவைகளுக்கு நிதி திரட்ட இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அணியும் 8 வீரர்களை உள்ளடக்கி இருக்கும். போட்டிகள் மதியம் 12 மணிக்குத் தொடங்கும். பிப்ரவரி 16 அன்று பரிசளிப்பு விழா நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x