Published : 03 Feb 2025 11:28 AM
Last Updated : 03 Feb 2025 11:28 AM
மும்பை: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2-வது அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் சர்மா.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இது 2-வது அதிவேக சதமாகும். அவர் 135 ரன்களில் அவுட்டானார். இந்த வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT