Published : 22 Jan 2025 07:23 AM
Last Updated : 22 Jan 2025 07:23 AM
சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் வரும் மார்ச் 25 முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.38 கோடியாகும். 25 மற்றும் 26-ம் தேதிகளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதான சுற்று 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இந்தத் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் கடந்த இரு பதிப்புகள் கோவாவில் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆடவர் பிரிவில் சீனாவின் லியாங் ஜிங்குன்னும், மகளிர் பிரிவில் சீனாவின் வாங் யிடியும் பட்டம் வென்றனர்.
2024-ம் ஆண்டு தொடரில் பிரான்ஸின் பெலிக்ஸ் லெப்ரூன், தைவானின் செங்-ஐ-சிங்கும் மகுடம் சூடினர். சென்னையில் நடைபெற உள்ள டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT