Published : 03 Jul 2014 10:00 AM
Last Updated : 03 Jul 2014 10:00 AM

விளையாட்டு செய்திச் சாரல்கள்...

# விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப், கனடாவின் யூஜீனி புச்சார்டு ஆகியோர் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

# இங்கிலாந்தின் டெர்பியில் நடைபெற்று வரும் டெர்பிஷையர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தின் 2-வது நாளில் இந்திய அணி 54.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. சேதேஷ்வர் புஜாரா 80 ரன்களுடனும், கேப்டன் தோனி 46 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக டெர்பிஷையர் அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

# இந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, வெளிநாட்டு பயிற்சியாளரால் இந்திய அணிக்கு எந்த நன்மையும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

# ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு மிட்பீல்டர் ரீது ராணி கேப்டனாகவும், பின்கள வீராங்கனை தீபிகா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

# கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் பவார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

# தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் தன்னாட்சி அதிகாரத்துக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அனைத்து சம்மேளனங்களும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானானந்த சோனோவால் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x