Published : 18 Nov 2025 07:04 AM
Last Updated : 18 Nov 2025 07:04 AM

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக 18-ம் படி முன் காத்திருந்த பக்தர்கள்.

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, நேற்று அதி​காலை முதலே மண்​டல​கால வழி​பாடு​கள் தொடங்​கின. புதிய மேல்​சாந்​தி​களாக பொறுப்​பேற்ற பிர​சாத் நம்​பூ​திரி ஐயப்​பன் கோயில் நடையை​யும், மனு நம்​பூ​திரி மாளிகை புரத்​தம்​மன் கோயில் நடையை​யும் திறந்து வைத்​தனர்.

இதையடுத்​து, சுவாமிக்கு செய்​யப்​பட்​டிருந்த முன்​தின அலங்​காரங்​களை களைந்​து, நிர்​மால்ய பூஜை, அபிஷேக வழி​பாடு​கள் நடை​பெற்​றது. பின்​னர், கணபதி ஹோமம் நடத்​தப்​பட்​டு, நெய் அபிஷேகம் செய்​யப்​பட்​டது.

பின்​னர், முதல்​கால பூஜை எனப்​படும் உஷத் பூஜை​யில் ஐயப்​பனுக்கு சிறப்பு அலங்​காரம், தீபா​ராதனை, உச்​சி​ கால பூஜை நடை​பெற்​றது. பகல் 1 மணிக்கு நடை சாத்​தப்​பட்டு மீண்​டும் 3 மணி முதல் இரவு 10.45 மணி வரை தொடர்ந்து வழி​பாடு​கள் நடை​பெற்​றன.

முதல்​நாளான நேற்று பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. பம்பா பாலம், கணபதி கோயில், நீலிமலை பாதை, நடைப்பந்​தல் போன்ற இடங்​களில் கடும் நெரிசல் ஏற்​பட்​டது. நிலக்​கல்​லில் இருந்து பம்​பைக்கு பக்​தர்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அரசுப் பேருந்​துகள் இயக்​கப்​ப​டாத​தால் பெரிதும் சிரமப்​படும் நிலை ஏற்​பட்​டது.

சந்​நி​தான கொடிமரம் அருகே திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு தலை​வர் ஜெயக்​கு​மார் `சபரிமலை டைரியை' வெளி​யிட்​டார். ரூ.80, ரூ.220, ரூ.330 விலை​யில் இவை தேவஸ்​தான ஸ்டால்​கள் அனைத்​தி​லும் கிடைக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டது.

மண்டல வழிபாட்டுக்காக கோயில் நடையை திறந்து வைத்த
புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி.

வனப் பாதைகள் திறப்பு: சபரிமலை​யில் பாத​யாத்​திரை பக்​தர்​களுக்​கான வனப் பாதை நேற்று திறக்​கப்​பட்​டது. இதையடுத்து சத்​திரம் மற்​றும் அழுதகடவு பாரம்​பரிய வழித்​தடங்​கள் பயன்​பாட்​டுக்கு வந்​தன. கடந்த மகர​விளக்கு பூஜைக்​குப் பிறகு இந்த வழித்​தடம் பயன்​பாடின்​றியே கிடந்​த​தால் விலங்​கு​கள் நடமாட்​டம் அதி​கம் உள்​ளது.

எனவே, காலை​யில் வனப்​பகுதி வழியே சென்ற பக்​தர்​களின் குழுக்​களுக்கு முன்​பாக துப்​பாக்கி ஏந்​திய வனத் துறை​யினர் சென்​றனர். வனத் துறை துணை இயக்​குநர் சஞ்​சீபு, வனச்​சரக அலு​வலர் பென்​னி, பிரிவு அலு​வலர் பிர​சாந்த் உள்​ளிட்​டோர் பக்​தர்​களை பாது​காப்​பாக அழைத்​துச் சென்​றனர். இதே​போல, அழுதகடவு வனப் பாதை​யிலும் பக்​தர்​கள் நேற்று அதி​கள​வில் சென்​றனர்.

இதுகுறித்து வனத்​துறை​யினர் கூறும்​போது, “குளுக்​கோஸ், பிஸ்​கெட் உள்​ளிட்ட எந்த வகை​யிலும் பிளாஸ்​டிக் பொருட்​களை கொண்​டு​வரக் கூடாது. மசாலா உள்​ளிட்ட உணவு​களின் வாசனைக்கு விலங்​கு​கள் வர வாய்ப்​புள்​ளது. எனவே, இது​போன்ற உணவுப் பொருட்​களைத் தவிர்க்க வேண்​டும்.

சத்​திரம் நுழைவு​பாதை​யில் காலை 7 முதல் 1 மணி வரையே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வர். அதி​கபட்​சம் 4 மணி நேரத்​துக்​குள் வெளி​யேறி விட வேண்​டும். வயதான, உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டுள்ள பக்​தர்​களை வனத் துறைக் குழு​வினர் பாது​காப்​பாக அழைத்​துச் செல்ல ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது” என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x