Published : 18 Nov 2025 12:07 AM
Last Updated : 18 Nov 2025 12:07 AM

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழாவினை யொட்டி, நேற்று கொடி ஏற்றப்பட்டது.

திருப்பதி: திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

பிரசித்தி பெற்ற திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் நேற்று வரு​டாந்​திர கார்த்​திகை பிரம்​மோற்சவ விழா வெகு விமரிசை​யாக​வும், கோலாகல​மாக​வும் தொடங்​கியது. நேற்று முன்​தினம் ஆகம​வி​தி​களின் படி அங்​கு​ரார்ப்பன நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. இதனை தொடர்ந்து நேற்று கோயி​லில் உள்ள தங்​கக் கொடி மரத்​தில் யானை சின்​னம் பொறித்த பிரம்​மோற்சவ கொடி ஏற்​றப்​பட்​டது. வேத பண்​டிதர்​கள் வேதங்​கள் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் இசைக்க, உற்சவ முர்த்​தி​யாக பத்​மாவதி தாயார் அருகே வீற்​றிருக்க, பிரம்​மோற்சவ கொடியேற்​றம் வெகு​விமரிசை​யாக நடை​பெற்​றது.
இதனைத் தொடர்ந்​து, நேற்​று​மாலை, ஆந்​திர அரசு தரப்​பில், மாநில இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரங்​களை தலை மீது சுமந்து வந்​த​படி, அவற்றை தேவஸ்​தான ஆகம வல்​லுநர்​களிடம் ஒப்​படைத்​தார்.

சின்ன சேஷ வாக​னத்​தில் தாயார்: இதனைத் தொடர்ந்​து, நேற்​றிர​வு, சின்ன சேஷ வாக​னத்​தின் மீது பத்​மாவதி தாயார் 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். வாகன சேவை​யின் முன்​பு, காளை​கள், குதிரைகள், யானை​கள் செல்ல, ஜீயர்​கள் நாலா​யிர திவ்ய பிரபந்​தங்​களை பாடியபடி உடன் செல்ல, இவர்​களுக்கு பின், பல மாநிலங்​களை சேர்ந்த நடனக் கலைஞர்​கள் நடன​மாடியபடி சென்​றனர். மாட வீதி​களில் கூடி​யிருந்த திரளான பக்​தர்​கள் தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்​டனர்.

மலர் கண்​காட்சி: பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்​டு, திருச்​சானூரில் கோயிலுக்கு எதிரே உள்ள வெள்​ளிக்​கிழமை தோட்​டத்​தில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தினர், தோட்​டக்​கலை துறை சார்​பில் கண்​கவர் மலர் காட்​சியை அமைத்​திருந்​தனர். இதனை நேற்று தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ரிப்​பன் வெட்டி தொடங்கி வைத்​தார். இங்கு ஆயுர்​வேத கண்​காட்​சி, சிற்​பக்​கலை கண்​காட்​சிகளும் மிக அழகாக அமைக்​கப்​பட்​டுள்​ளது. இது பக்​தர்​களை வெகு​வாக கவர்ந்​துள்​ளது.

ஜொலிக்​கும் திருச்​சானூர்: பிரம்​மோற்சவ விழா நேற்று 17-ம் தேதி தொடங்​கி, வரும் 25-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்​கள் நடை​பெற உள்​ளதை
யொட்​டி, திருச்​சானூர் நகரம் முழு​வதும் மின் விளக்கு களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டுள்​ளது. முகப்பு கோபுரம் உட்பட நகரின் முக்​கிய இடங்​களில் மின் விளக்கு கட் அவுட்​கள், தோர ணங்​கள், மலர் அலங்​காரங்​கள்​ அனை​வரை​யும்​ கவரும்​ விதத்​தில்​ உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x