Published : 17 Nov 2025 06:00 AM
Last Updated : 17 Nov 2025 06:00 AM

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் புனித நீராடிய பக்தர்கள்.

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர். பக்​தர்​கள் புனித நீராடிய​தால் ஏற்​பட்ட பாவச்​சுமை​யின் காரண​மாக கருமை நிற​மாக மாறிய கங்கை நதி உள்​ளிட்ட ஜீவந​தி​கள், மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் புனிதநீ​ராடி சிவனை வழிபட்​டு, தங்​கள் பாவங்​களைப் போக்​கிக் கொண்​ட​தாக புராணத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதனடிப்​படை​யில், ஆண்​டு​தோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் மயி​லாடு​துறை துலாக்​கட்ட காவிரி​யில் துலா உற்​சவம் நடத்தப்பட்டு வரு​கிறது. நடப்​பாண்டு அக். 18-ம் தேதி துலாக்​கட்ட காவிரி​யில் தீர்த்​த​வாரி​யுடன் துலா உற்​சவம் தொடங்​கியது. தொடர்ந்​து, நேற்று மதி​யம் 2.30 மணி​யள​வில் கடை​முக தீர்த்​த​வாரி நடை​பெற்​றது.

பஞ்சமூர்த்திகள் புறப்பாடு... இதையொட்​டி, திரு​வாவடு​துறை ஆதீனத்​துக்​குச் சொந்​த​மான அபயாம்​பிகை சமேத மாயூர​நாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்​பர், தரு​மபுரம் ஆதீனத்​துக்​குச் சொந்​த​மான தெப்​பக்​குளம் விசாலாட்சி சமேத காசி விஸ்​வ​நாதர், படித்​துறை விசாலாட்சி சமேத காசி விஸ்​வ​நாதர் ஆகிய கோயில்​களில் இருந்து சுவாமி, அம்​மன் உள்​ளிட்ட பஞ்​சமூர்த்​தி​கள் புறப்​பாடு செய்​யப்​பட்​டு, துலாக்​கட்ட காவிரி தென் கரை​யில் எழுந்​தருளினர்.

வடக்கு, தெற்கு கரைகளில்... அதே​போல, தரு​மபுரம் ஆதீனத்​துக்​குச் சொந்​த​மான ஞானாம்​பிகை சமேத வதான்​யேஸ்​வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்​வ​நாதர் ஆகிய கோயில்​களில் இருந்து சுவாமி, அம்​மன் உள்​ளிட்ட பஞ்​சமூர்த்​தி​கள் புறப்​பாடு செய்​யப்​பட்​டு, காவிரி வடக்கு கரை​யில் எழுந்​தருளினர்.

தொடர்ந்​து, திரு​வாவடு​துறை ஆதீனம் 24-வது குரு​மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ அம்​பல​வாண தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள் முன்​னிலை​யில் தெற்கு கரை​யிலும், தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகள் முன்​னிலை​யில் வடக்கு கரை​யிலும் அஸ்​திர தேவர்​களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை​கள் செய்​யப்​பட்டு தீர்த்​த​வாரி நடை​பெற்​றது.

அப்​போது, ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் காவிரி ஆற்​றின் இரு​புற​மும் கூடி​யிருந்த ஏராள​மான பக்​தர்​கள் புனித நீராடினர். திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீன கட்​டளை தம்​பி​ரான்​கள் உள்​ளிட்​டோர் தீர்த்தவாரி உற்​சவத்​தில் கலந்​து​கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x