Last Updated : 16 Nov, 2025 12:18 AM

 

Published : 16 Nov 2025 12:18 AM
Last Updated : 16 Nov 2025 12:18 AM

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு

சத்திரம் வனப் பகுதியில் பக்தர்களை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில். (அடுத்த படம்) பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடை​பெறு​வதை முன்​னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பக்​தர்​களும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் தின​மும் தரிசனத்​துக்கு வர உள்​ளனர். இதையொட்​டி, பக்​தர்​கள் வசதிக்​காக பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறிய​தாவது: பம்​பை​யில் புதி​தாக 10 கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 10 ஆயிரம் பக்​தர்​கள் தங்கி ஓய்​வெடுக்​கலாம். பம்பை ஹில்​டாப், சக்கு பாலத்​தில் சிறிய வாக​னங்​களுக்​கான நிறுத்​தம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் வரை 56 இடங்​களில் பக்​தர்​களுக்கு சுக்கு நீர் விநி​யோகிக்​கப்​படும்.மொத்​தம் 41 நாட்​கள் மண்டல கால வழி​பாடு​கள் நடை​பெறும்.

தரிசன வரிசை​யில் நிற்​கும் பக்​தர்​களுக்கு பிஸ்​கெட், மூலிகை குடிநீர் வழங்​க​வும், அன்​ன​தானத்​துக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. பாத​யாத்​திரை பக்​தர்​களின் உடல்​வலி உபாதையை சரி செய்ய 24 மணி நேர பிசி​யோதெரபி மையங்​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அனைத்து ஏற்​பாடு​களும் முழுமை அடைந்​துள்​ளன. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், சபரிமலை செல்​லும் முக்​கிய வனப் பாதை​யான சத்​திரத்​தில் இடுக்கி மாவட்ட கூடு​தல் ஆட்​சி​யர் ஷைஜு பி.ஜேக்​கப் தலை​மை​யில் சிறப்பு பிரிவு காவல் துணைக் கண்​காணிப்​பாளர் யூனுஸ், மாவட்ட துணை மருத்​துவ அதி​காரி ஜோபின் ஜி.ஜோசப், சுகா​தா​ரத் துறை அதி​காரி ஷரத் ஜி.​ராஜ் உள்​ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x