Published : 08 Nov 2025 06:55 AM
Last Updated : 08 Nov 2025 06:55 AM

மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை துலாக்​கட்ட காவிரி​யில் ஆண்​டு​தோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் துலா உற்​சவம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. மாதம் முழு​வதும் தின​மும் சிவன் கோயில்​களி​லிருந்து சுவாமிகள் புறப்​பாடு செய்​யப்​பட்​டு, துலாக்​கட்ட காவிரி​யில் தீர்த்த​வாரி நடை​பெறும். ஐப்​பசி கடைசி நாள் நடை​பெறும் கடை​முக தீர்த்​த​வாரி வைபவத்தை முன்​னிட்டு நேற்று மயி​லாடு​துறை கோயில்​களில் துலா உற்சவ திருக்​கொடியேற்​றம் நடை​பெற்​றது.

மாயூர​நாதர் கோயி​லில் ரிஷப கொடி கோயி​லின் நான்கு வீதி​களை​யும் வலம் வந்​து, கோயில் கொடி மரத்​துக்கு எடுத்து வரப்​பட்​டது. தொடர்ந்து அபயாம்​பிகை சமேத மாயூர​நாதர் சுவாமி பஞ்​சமூர்த்​தி​களு​டன் சிறப்பு அலங்​காரத்​தில் கொடிமரம் முன்பு எழுந்தருளியதும், திரு​வாவடு​துறை ஆதீன கட்​டளை சங்​கரலிங்க தம்​பி​ரான் சுவாமிகள் முன்​னிலை​யில், கொடிமரத்​துக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்டு கொடியேற்​றம் செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனைக் காட்​டப்​பட்​டது.

தொடர்ந்து கோயி​லின் நான்கு பிர​காரங்​களில் கொடியேற்​றப்​பட்​டது. இதில் கோயில் கண்​காணிப்​பாளர் குரு​மூர்த்தி உள்​ளிட்ட பக்தர்​கள் பலர் கலந்​து​கொண்​டனர். இதே​போல, வதானேஸ்​வரர் கோயி​லில் தரு​மபுரம் ஆதீன கட்​டளை விசா​ரணை ஸ்ரீமத் சிவகுரு​நாத தம்​பி​ரான் சுவாமிகள் முன்​னிலை​யில் கொடியேற்​றம் நடை​பெற்​றது. மேலும், தெப்​பக்​குளம் காசி விஸ்​வ​நாதர், மார்க்​கெட் காசி விஸ்​வ​நாதர் உள்​ளிட்ட கோயில்​களில் துலா உற்சவ கொடியேற்​றம் நடை​பெற்​றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x