Published : 05 Nov 2025 06:51 AM
Last Updated : 05 Nov 2025 06:51 AM

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் 17-ல் தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிட்ட திருப்பதி எஸ்.பி.  

கோப்புப் படம்

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாகம் சார்​பில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை மாதம், திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த ஆண்​டு, இவ்​விழா வரும் 17-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, 25-ம் தேதி பஞ்​சமி தீர்த்​தத்​துடன் நிறைவடைய உள்​ளது.

இதையொட்டி திருச்​சானூர் தாயார் கோயி​லில் வாகன பராமரிப்பு பணி​கள், வர்​ணம் தீட்​டும் பணி​கள், மாட வீதி​களில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் பணி​கள் என அனைத்து பணி​களும் நிறைவடைந்​துள்​ளன.

மேலும், பிரம்​மோற்​சவத்​துக்கு திருப்​ப​தி​யில் இருந்து திருச்​சானூருக்கு தொடர்ச்​சி​யாக அரசுப் பேருந்​துகளை இயக்​க​வும் ஆந்​திர அரசுப் போக்​கு​வரத்து கழக அதிகாரிகளிட​மும் பேச்சுவார்த்தை நடத்​தப்​பட்டு விட்​டது. அது​மட்​டுமல்​லாமல் பக்​தர்​களுக்கு தகுந்த பாது​காப்​பு, இலவச உணவு, தரிசன வசதி, லட்டு பிர​சாத விநி​யோகம் போன்​ற ஏற்பாடுகளும் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று காலை பிரம்​மோற்சவ விழாவுக்​கான பாது​காப்பு ஏற்​பாடு​களை திருப்​பதி எஸ்​.பி. சுப்​பு​ரா​யுடு தலை​மை​யில் உயர் அதி​காரி​கள் மேற்​பார்​வை​யிட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x