Published : 03 Nov 2025 07:15 AM
Last Updated : 03 Nov 2025 07:15 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் வழிபாட்டில் பங்கேற்றோர்.

நாகப்பட்டினம்: ஆண்​டு​தோறும் நவ. 2-ம் தேதியை கல்​லறை திரு​நாளாக கிறிஸ்​தவர்​கள் அனுசரிப்​பது வழக்​கம். இதையொட்​டி, நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புகழ்​பெற்ற புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில், இறந்த குருக்​கள், உறவினர்களின் ஆன்​மாவுக்கு மரி​யாதை செலுத்​தும் வகை​யில் நேற்று கல்​லறை திருநாளாக அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்​டி, பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் சிறப்பு திருப்​பலி நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கிறிஸ்​தவர்​கள், வேளாங்​கண்ணி பேரால​யத்தை சுற்றி அடக்​கம் செய்​யப்​பட்ட பாதிரி​யார்​கள் மற்​றும் தங்​களது உறவினர்​களின் கல்​லறை​களை சுத்​தம் செய்​து, பூக்​களால் அலங்​கரித்​து, உணவுப் பண்​டங்​களை வைத்து படையலிட்​டு, மெழுகு​வத்தி ஏற்​றி, சிறப்பு வழி​பாடு நடத்​தினர்.

பின்​னர், வேளாங்​கண்ணி ஆர்ச் கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபி​யில் வேளாங்​கண்ணி பேரால​யம் சார்​பில் கல்​லறை திரு​நாள் வழி​பாடு நடை​பெற்​றது. முன்​ன​தாக, பேரால​யத்​தில் இருந்து ஊர்​வல​மாக வந்​து, நினைவு ஸ்தூபி​யில் மெழுகு​வத்தி ஏற்​றி, மலர்​கள் தூவி வழி​பாடு நடத்​தினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x