Published : 01 Nov 2025 07:04 AM
Last Updated : 01 Nov 2025 07:04 AM

சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை திரு​விழா வரும் 17-ம் தேதி தொடங்​கு​கிறது. இதற்​காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

பக்​தர்கள் ஆன்​லைன் முன்​ப​திவு மூலமே சுவாமி தரிசனம் செய்ய முடி​யும். இதற்​கான முன்​ப​திவு இன்று தொடங்க உள்​ளது. தற்​போது ஆன்​லைன் முன்​ப​திவுக்​கான செயலி​யில் ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​துடன் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தரிசனத்துக்கு வரும் தேதி, நேரம், காலநிலை, அவசர​கால அழைப்​பு, மருத்​துவ வசதி உள்ளிட்ட வசதி​களு​டன் இந்த செயலி செயல்​படும் என்று திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x