Published : 31 Oct 2025 10:03 AM
Last Updated : 31 Oct 2025 10:03 AM

ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் யாகம்

திருமலை: வரு​டாந்​திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திரு​மலை​யில் வெகு சிறப்​பாக நடந்​தது.

இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதே​வி, சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன. முன்​ன​தாக 9 டன் மலர்க் கூடைகளை தேவஸ்​தான ஊழியர்​கள், அதி​காரி​கள் ஊர்​வல​மாக கொண்டு வந்து கோயி​லில் ஒப்​படைத்​தனர்.

இது தொடர்​பாக திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் திரு​மலை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

ஆண்​டு​தோறும் பிரம்​மோற்சவ விழா முடிந்த பின்​னர், உற்சவ மூர்த்​தி​களுக்கு புஷ்ப யாகம் நடத்​து​வது ஐதீகம். கார்த்​திகை மாதம் பெரு​மாளின் திரு​வோணம் நட்​சத்​திரத்​தில் இந்த புஷ்ப யாகம் நடத்​தப்​படும். இதை கடந்த 15-ம் நூற்​றாண்டு வரை தொடர்ந்து அரசர்​கள் நடத்தி வந்​துள்​ளனர். அதன்​பின்​னர், எந்த காரணத்​தி​னாலோ புஷ்ப​யாகம் கைவிடப்​பட்​டுள்​ளது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் இந்த புஷ்ப யாகத்தை மீண்​டும் நடத்தி வரு​கிறது.

இந்த புஷ்ப யாகத்​தில் 16 வகை பூக்​களும், 6 வகை துளசி, தவனம் போன்ற இலைகளும் உபயோகப்​படுத்​தப்​பட்​டன. இதில் 5 டன் மலர்​கள் தமிழகத்​தில் இருந்​தும், தலா 2 டன் மலர்​கள் கர்​நாடகா மற்​றும் ஆந்​திர மாநிலங்​களில் இருந்​தும் பக்​தர்​கள் நன்​கொடை​யாக வழங்​கினர். இவ்​வாறு அணில்​கு​மார்​ சிங்​கால்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x