Last Updated : 31 Oct, 2025 07:11 AM

 

Published : 31 Oct 2025 07:11 AM
Last Updated : 31 Oct 2025 07:11 AM

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கம்: தேவசம் போர்டு செயலர் தகவல் 

உள்படம் | தேவசம் போர்டு செய​லர் எம்​.ஜி.​ராஜ​மாணிக்​கம்

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. ஒரு மண்​டலம் விரதமிருந்து ஐயப்​பனை தரிசனம் செய்ய ஏராள​மாள பக்​தர்​கள் ஆர்​வம் காட்டி வரு​வ​தால் மண்​டல, மகர பூஜை காலங்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சபரிமலைக்கு வரு​கின்​றனர். இதையொட்​டி, பக்​தர்​களுக்கு பல்​வேறு வசதி​கள் ஏற்​பாடு செய்​யப்பட உள்​ளன. இதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் திரு​வனந்​த​புரத்​தில் தேவசம் அமைச்​சர் வி.என்​.​வாசவன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதுகுறித்து தேவசம் போர்டு செய​லர் எம்​.ஜி.​ராஜ​மாணிக்​கம் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: பக்​தர்​கள் தற்​போது ஆன்​லைன் மூலம் சேவை​களைப் பெற்று வரு​கின்​றனர். அவர்​கள் வசதிக்​காக ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​துடன் கூடிய, பலமொழி தகவல் தொடர்பு செயலி விரை​வில் அறி​முகப்​படுத்​தப்​பட​வுள்​ளது. இதில், தரிசனம், தங்​கும் வசதி, அவசரத் தேவை, மருத்​துவ வசதி, காலநிலை உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் தெரிந்து கொள்​ளலாம். அதில் உள்ள எண்​களில் தொடர்பு கொண்​டும் பலனடைய​லாம்.

கூடுதலாக, 1500 வாகனங்கள்.. நிலக்​கல்​லில் வழக்​க​மாக நடப்​பாண்டு கூடு​தலாக 1,500 வாக​னங்​கள் நிறுத்த ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​காக வாகன பாது​காப்​பு, தடையற்ற இயக்​கத்தை கண்​காணிக்​கும் வகை​யில் புதி​தாக 3 கட்​டுப்​பாட்டு அறை​கள் அமைக்​கப்​படும். இங்​கிருந்து பத்​தினம்​திட்​டா, எரிமேலி உள்​ளிட்ட முக்​கிய வழித்​தடங்​கள் 24 மணி நேர​மும் கண்​காணிக்​கப்​படும். அதே​போல, நடப்​பாண்டு கேரள அரசு சார்​பில் 500 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

நிலக்​கல்​-பம்பை இடையே சுழற்சி முறை​யில் 24 மணி நேர​மும் பேருந்​துகள் இயக்​கப்​படும். இதய பாதிப்பு உள்​ளிட்​ட​வற்​றுக்கு உயர்தர மருத்​துவ சேவை​கள் தேவசம்​போர்டு சார்​பில் வழங்​கப்​படும். இதற்​கான நிதி ஆதா​ரத்​துக்​காக ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்​யும் பக்​தர்​களிடம் விருப்​பக் கட்​ட​ண​மாக ரூ.5 பெறப்​படும்.

பதிவு செய்​யும் பக்​தர்​கள் கேரளா​வுக்​குள் நுழைந்​து, வெளி​யேறும்​வரை காப்​பீட்​டுத் திட்​டத்​தில் பல வசதி​களைப் பெறு​வர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. நேரடி புக்​கிங் செய்​பவர்​கள் நெரிசல் இல்​லாத நேரங்​களில் தரிசனத்​துக்கு அனுப்​பப்​படு​வர். எனவே, முடிந்​தவரை ஸ்பாட் புக்​கிங் செய்​வதை தவிர்க்க வேண்​டும். விரை​வில் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்​சி​யர்​களின் தலை​மை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x