Published : 27 Oct 2025 06:46 AM
Last Updated : 27 Oct 2025 06:46 AM

கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்​டை, குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம்

கந்​தசஷ்டி 5-ம் நாள் உற்​சவத்தை முன்​னிட்​டு, வல்லக்​கோட்டை முரு​கன் கோயி​லில் சிறப்பு அலங்​காரத்​தில்​ பக்​தர்​களுக்​கு அருள்​பாலித்​த முரு​கப்​ பெருமான்.

திருப்​போரூர்: கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்டை மற்​றும் குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம் நடை​பெறுகிறது. திருப்​போரூரில் உள்ள புகழ்​பெற்ற அருள்​மிகு கந்​த​சாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் கந்​தசஷ்டி விழா கடந்த புதன்​கிழமை கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தின​மும் அதி​காலை நடை திறக்​கப்​பட்டு சிறப்பு அலங்​காரத்​தில் முரு​கப்​பெரு​மான் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார்.

இதையொட்​டி, தின​மும் லட்​சார்ச்​சனை நடை​பெறு​வ​தால், பக்​தர்​கள் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்​தனர். இதற்​கிடை​யில், கந்த சஷ்டி​யின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முரு​கப்​பெரு​மான் சூரபத்​மனை வதம் செய்​யும் சூரசம்​ஹார நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

வல்​லக்​கோட்டை: இதே​போல், கந்​தசஷ்டி 5-ம் நாள் உற்​சவத்தை முன்​னிட்​டு, வல்​லக்​கோட்டை முரு​கப்​பெரு​மான் உள்ள கிராமத்​தில் சடை​யீஸ்​வரர் கோயிலுக்கு எழுந்​தருளி வேல் வாங்​கும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இன்று சூரசம்​ஹார​மும், நாளை கல்​யாண உற்​சவ​மும் நடை​பெற உள்​ளது.

குன்​றத்​தூர்: குன்​றத்​துார் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்த சஷ்டி விழாவை முன்​னிட்​டு, சூரபத்​மனை வதம் செய்​வதற்​காக, குன்​றத்​துார் முரு​கன் கோயில் மலை அடி​வாரத்​தில் உள்ள கந்​தழீஸ்​வரர் கோயி​லில் முரு​கன் வேல் வாங்​கும் விழா நேற்று மாலை நடந்​தது. இதைத் தொடர்ந்​து, இன்று மாலை சூரசம்​ஹாரம் விழா நடை​பெற உள்​ளது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் நிர்​வாகத்​தினர் செய்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x