Published : 23 Oct 2025 06:43 AM
Last Updated : 23 Oct 2025 06:43 AM

ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா யாக​சாலை பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விரதம் தொடங்​கினர். விழாவையொட்டி நேற்று அதி​காலை ஒரு மணிக்கு நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. பின்​னர், சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை அம்​மனுடன் யாக​சாலை​யில் எழுந்தருளினார்.

கோயில் தக்​கார் ரா.அருள்​முரு​கன், இணை ஆணை​யர் க.ராமு ஆகியோரிடம் காப்பு கட்​டிய சோமாஸ் கந்​தர் பட்​டர் தாம்​பூலம் பெற்​று, யாக​சாலை பூஜையை தொடங்​கி​னார். பின்​னர், விக்​னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோம பூஜைகள் நடை​பெற்​றன.

மூல​வர் மற்​றும் சண்​முகருக்கு உச்​சி​கால தீபா​ராதனைக்கு பின்​னர் யாக​சாலை​யில் சுவாமி ஜெயந்​தி​நாதருக்கு மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. பின்​னர் சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை​யுடன் தங்க சப்​பரத்​தில் எழுந்​தருளி சண்​முக விலாச மண்​டபம் சேர்ந்​தார்.

அங்கு சுவாமிக்கு மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. பின்​னர், சுவாமி திரு​வாவடு​துறை ஆதின கந்​தசஷ்டி மண்​டபத்​துக்கு எழுந்​தருளி​னார். தொடர்ந்​து, சுவாமி​யும் அம்​மனும் தங்க ரதத்​தில் எழுந்​தருளி கிரி பிர​காரம் உலா வந்து பக்​தர்​களுக்கு காட்சி அருளினர்.

ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் அதி​காலை​யிலேயே கடலில் புனித நீராடி காவி மற்​றும் பச்சை நிற ஆடை அணிந்து கோயில் கிரி பிர​காரத்​தில் அங்​கப் பிரதட்​சணம் செய்து விரதத்தை தொடங்​கினர். பெண்​கள் கிரி பிர​காரத்​தில் அடிப் பிரதட்​சணம் செய்​தனர். விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை கடற்​கரை​யில் நடை​பெறுகிறது. மறு​நாள் திருக்​கல்​யாண வைபவம் நடை​பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x