Last Updated : 22 Oct, 2025 06:51 AM

 

Published : 22 Oct 2025 06:51 AM
Last Updated : 22 Oct 2025 06:51 AM

அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை

சென்னை சாலிகிராமம் ஸ்ரீ பால விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் அரசமர சுயம்பு பிள்ளையார்.

சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகி​ராமத்​தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெரு​வில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு சுயம்பு மூர்த்​தி​யாகத் தோன்​றிய அரசமர பிள்​ளை​யாருக்​கு, ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் ராகு​கால சமயத்​தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்​சனை நடை​பெறுகிறது.

இதுகுறித்து இக்​கோ​யில் அரங்​காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலை​வரு​மான குருஜி ஸ்ரீ சுப்​பிரமணி​யம் கூறிய​தாவது: 1983-ம் ஆண்​டு, நானும் எனது நண்​பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்​பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்​சார்ச்​சனை தொடங்​கப்​பட்​டது.

குருஜி சுப்பிரமணியம்

2000-ம் ஆண்டு ராஜ கோபுரம் கட்டி மூல​வர், முருகர், ஆஞ்சநேயர் சந்​நி​தி​களை அமைத்​தோம். ஏகதின லட்​சார்ச்​சனை​யின் 14-ம் ஆண்டு சமயத்​தில் அரசமரத்​தில் சுயம்​பு​வாக விநாயகர் தோன்​றி​னார்.

அன்று முதல் அரசமர விநாயகருக்கு ஞாயிற்​றுக்​கிழமை ராகு​கால வேளை​யில் திரிசதி அர்ச்​சனை செய்து வரு​கிறோம்ஸ்ரீ ஜெயேந்​திர சரஸ்​வதி சுவாமிகளும், ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகளும் இக்​கோ​யிலை ‘திவ்ய ஷேத்​ரம்​’ என்​று கூறு​வர்​ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x