Published : 20 Oct 2025 06:39 AM
Last Updated : 20 Oct 2025 06:39 AM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திரு​விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்​டி, அன்று அதி​காலை 1 மணிக்கு நடை​திறக்​கப்​படு​கிறது. தொடர்ந்து பல்​வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு யாக​சாலை பூஜை​யுடன் கந்​தசஷ்டி திரு​விழா தொடங்​கு​கிறது.

அன்று சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை​யுடன் தங்​கச்​சப்​பரத்​தில் சண்​முகவி​லாச மண்​டபத்​துக்கு எழுந்​தருள்​கிறார். அங்​கிருந்து திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​துக்கு செல்​கிறார். அங்கு சுவாமி, அம்​மனுக்கு அபிஷேகம், அலங்​காரம் செய்​யப்​பட்ட பின்​னர், சுவாமி, அம்​மனுடன் தங்க ரதத்​தில் எழுந்​தருளி கிரி வீதி​யில் பவனி வந்து கோயில் சேர்​கிறார்.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் வரும் 27-ம் தேதி நடை​பெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்​தி​நாதர் சூரசம்​ஹாரத்​துக்கு எழுந்​தருள்​கிறார். பின்​னர் கடற்​கரை​யில் சுவாமி ஜெயந்​தி​நாதர், சூரபத்​மனை வதம் செய்​யும் நிகழ்ச்சி நடை​பெறும். தொடர்ந்து சந்​தோஷ மண்​டபத்​தில் சுவாமிக்​கும், அம்​மனுக்​கும் மகா தீபா​ராதனை நடை​பெறும்.

வரும் 28-ம் தேதி அதி​காலை தெய்​வானை அம்​மன் கோயி​லில் இருந்து தபசு காட்​சிக்கு புறப்​படு​கிறார். மாலை 6 மணி​யள​வில் அம்​மனுக்​கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்​றும் வைபவம் நடக்​கிறது. இரவு சுவாமி குமர​விடங்க பெரு​மானுக்​கும், தெய்​வானை அம்​மனுக்​கும் திருக்​கல்​யாணம் நடக்​கிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் தக்​கார் ரா.அருள்​முரு​கன், இணை ஆணை​யர் க.ராமு உள்​ளிட்​டோர் செய்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x