Published : 10 Oct 2025 06:39 AM
Last Updated : 10 Oct 2025 06:39 AM

வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல்

சென்னை: நூல​கங்​களில் பாது​காக்​கப்​பட்டு, வெளி​யிடப்​ப​டாத கையெழுத்​துப் பிர​தி​களின் பதிப்​பு​களை வெளிக்​கொண்டு வர இக்​கால அறிஞர்​கள் முயற்சி செய்ய வேண்​டும் என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

பாரம்​பரிய குரு​குல முறை​யின்​கீழ் 16 தேர்​வு​களை உள்​ளடக்​கிய ஆறு ஆண்டு கால பாடத்​திட்​ட​மாக, தெனாலி சாஸ்​திர பரீட்சை உள்​ளது. இந்த சாஸ்​திர பயிற்​சியை வெற்​றிகர​மாக முடித்த 12 சாஸ்​திர அறிஞர்​களை, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பாராட்​டி, ஆசி வழங்​கினர்.

பாரம்​பரிய சாஸ்​திர சம்​பிர​தா​யத்தை பாது​காப்​ப​தில் அதிக ஈடு​பாடு கொண்​டு, இந்​தியா முழு​வதும் பல்​வேறு குரு​நாதர்​களிடம் வேத பயிற்சி பெற்ற அறிஞர்​களின் கல்​வித் திறமை மற்​றும் அர்ப்​பணிப்பை அங்​கீகரிக்​கும் வித​மாக அவர்​களுக்கு சால்​வை, சான்​றிதழ், வெகு​மானம் வழங்​கப்​பட்​டன.

நிகழ்ச்​சி​யில் அனுக்​கிரஹ பாஷணம் வழங்​கிய ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், “விரி​வான பாடத்​திட்​டம், தேர்வு கட்​டமைப்​புக்​குப் பெயர் பெற்ற தெனாலி சாஸ்​திர பரீக் ஷா சபை, பாரம்​பரிய சாஸ்​திர சம்​பிர​தா​யங்​களைக் கற்று தேர்ச்சி பெற ஆர்​வம் கொண்ட மாணவர்​களை ஊக்​கு​வித்து வரு​கிறது.

ஆசிரியர்​களுக்கு பாராட்​டு: பல்​கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில், ஆசிரியர் பதவி​களுக்​கான போட்​டித் தேர்​வு​களில் பங்​கேற்க உதவுவதன் மூலம் பல அறிஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​களை இந்த சபை வழங்க வேண்​டும். சாஸ்​திரங்​கள் தொடர்​பான ஆய்​வு, ஒரு​வரை தூய்​மை​யான மனதுடன் நற்​செயல்​கள் புரிய வைக்​கும். நூல​கங்​களில் பாது​காக்​கப்​பட்​டு, வெளி​யிடப்​ப​டாத கையெழுத்​துப் பிர​தி​களின் பதிப்​பு​களை வெளிக்​கொண்டு வர இக்​கால அறிஞர்​கள் முயற்சி செய்ய வேண்​டும்.

சாஸ்​திர கல்​வி​யின் நோக்​கத்தை உணர்ந்​து, அதன் பழமை​யான பாரம்​பரிய வடிவத்​தைப் பேணிப் பாது​காப்​பதை தங்​கள் கடமை​யாகக் கொண்ட அறிஞர்​கள் மற்​றும் அவர்​களின் ஆசிரியர்​கள் பாராட்​டுக்கு உரிய​வர்​கள்” என்​றார். மேலும், சமூக நலனுக்​காக​வும், தர்ம பிரச்​சா​ரத்​துக்​காக​வும் சாஸ்​திர அறிவைப் பயன்​படுத்​து​வதன் முக்​கிய​வத்​து​வத்தை சுவாமிகள் வலி​யுறுத்​தி​னார்.

இந்த நிகழ்​வில் காஞ்சி பல்​கலை. வேந்​தர் குடும்ப சாஸ்​திரி, துணைவேந்​தர் ஜி. ஸ்ரீநி​வாசு, திருப்​ப​தி​யில் உள்ள தேசிய சம்ஸ் ​கிருத பல்​கலைக்​கழக துணை வேந்​தர் ஜி.எஸ்​.ஆர். கிருஷ்ண​மூர்த்​தி, ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா வேத பல்​கலை. துணைவேந்​தர் ராணி சதாசிவ​மூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி ஏற்​பாடு​களை வேத விற்​பன்​னர்​ ஸ்ரீ ராம்​லால்​ சர்​மா செய்​திருந்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x