Published : 01 Oct 2025 06:56 AM
Last Updated : 01 Oct 2025 06:56 AM

ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா

இன்றைய தேரோட்டத்திற்கு தயாராக இருக்கும் திருமலை கோயில் குளத்துக்கு எதிரே உள்ள தேர்.

திருமலை: மனிதர்​களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்​லாம். கடவுளுக்கு கிடை​யாது. இதைத்​தான் திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு செய்​யும் கைங்​கர்​யங்​கள் நமக்கு போதிக்​கிறது. இன்று பிரம்​மோற்​சவத்​தில் காலை தேர்த்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இந்த தேரின் உச்​சி​யில் சவர தொழிலா​ளர்​கள் வழங்​கும் தங்க குடை​தான் அமைக்​கப்​படு​கிறது. அதன் கீழ்​தான் உற்சவ மூர்த்​தி​கள் தேரில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்பாலித்து வரு​கின்​றனர்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நடை​பெறும் கைங்​கர்​யங்​களை உற்று நோக்​கி​னால், ஜாதி, மதம் என்​பது பெரு​மாளுக்கு கிடை​யாது என்​பதை நாம் நன்கு அறிய முடி​யும். பல ஆண்​டு​களாக திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு சுப்​ர​பாத சேவைக்கு முன், கோயில் திறந்​ததும் முதல் தரிசனம் யாதவ குலத்​தவர்​களுக்கு தான் வழங்​கப்​படு​கிறது.

இதே போன்று இரவு நடை சாத்​தப்​படு​வதற்கு முன் ஏகாந்த சேவை​யின்போது, கடைசி​யாக நாவிதரின் நாதஸ்வர இசை இசைத்த பின்​னர் தான் பெரு​மாள் துயிலுறங்க செல்​கிறார். ஒவ்​வொரு செவ்​வாய் கிழமை​களி​லும் நடத்​தப்​படும் அஷ்டதள பாத பத்​மா​ராதனை சேவை​யில், குண்​டூரை சேர்ந்த ஷேக் மஸ்​தான் எனும் பக்​தர் வழங்​கிய 108 தங்க புஷ்பங்​களை கொண்​டு​தான் அந்த ஆர்​ஜித சேவை​ கடந்த 1984-ம் ஆண்டு முதல் நடக்​கிறது.

குய​வர்​கள் செய்​யும் மண் சட்​டி​யில் தான் தீபாவளி ஆஸ்​தானமே நடை​பெறுகிறது. பழங்​குடி இனத்​தவர்​களின் குலதெய்​வ​மாக கொண்​டாடப்​படும் ஹத்​தி​ராம் மடம் சார்​பில் தான் இன்​றள​வும் தின​மும் சுப்ர​பாத சேவை​யில் வெண்ணை மற்​றும் இதர பிர​சாதங்​கள் நைவேத்​தி​ய​மாக படைக்​கப்​படு​கிறது. இப்​படி​யாக பல ஜாதி​கள், பிரி​வினரின் கைங்​கர்​யங்​கள் திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு காலம் கால​மாக செய்​யப்​பட்டு வரு​கிறது.

இதே​போல் தான் இன்று நடை​பெற உள்ள தேர்த்திரு​விழா​விலும், திரு​மலை​யில் முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தில் பணி​யாற்​றும் சவர தொழிலா​ளர்​கள் சார்​பில் வழங்​கப்​படும் தங்க குடையை ரதத்​தின் உச்​சி​யில் வைத்து ரதோற்​சவம் நடத்​தப்​படு​கிறது.

சிறப்பு பூஜைகள்: பல ஆண்​டு​களுக்கு முன்​பாக மரக்​கட்​டை​யில் இந்த குடை சவர தொழிலா​ளர்​களால் வழங்​கப்​பட்டு வந்​தது. ஆனால், கடந்த 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக தங்க குடை​தான் தேரின் உச்​சி​யில் அமைக்​கப்​படு​கிறது. பந்​துலு​காரி வம்​சத்​தினர் சார்​பில் ஸ்ரீ கிருஷ்ண தேவ​ராயர் காலத்​தில் இருந்து தேருக்கு குடை வழங்​கப்​பட்டு வரும் ஐதீகம் இருந்து வந்​துள்​ளது. நேற்று மாலை தங்க குடைக்கு கல்​யாண கட்​டா​வில் சிறப்பு பூஜைகள் நடத்​தப்​பட்​டன.

இதனை தொடர்ந்து சவர தொழிலா​ளர்​கள் அந்த குடையை ஊர்​வல​மாக கொண்டு சென்​று, அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். இக்​குடை இன்று தேரின் உச்​சி​யில் காணப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x