Published : 28 Sep 2025 06:38 AM
Last Updated : 28 Sep 2025 06:38 AM

பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை: திருமலையை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்கலப் பொருட்களை ஜீயர் தலையில் சுமந்து கோயிலுக்குள் சென்று ஒப்படைத்தார்.

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடை​பெற உள்​ளது.

இதையொட்டி ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இருந்து ஆண்​டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் நேற்று மதி​யம் திரு​மலையை வந்​தடைந்​தன. தமிழக இந்து சமய அறநிலை​யத்​துறை இணை ஆணை​யர் மாரி​முத்​து, நிர்​வாக அதி​காரி சக்​கரை அம்​மாள், ஆச்​சா​ரி​யார் ரமேஷ் ரங்​க​ராஜன் ஆகியோர் மங்​கலப் பொருட்​களை கொண்​டு​வந்​தனர். இவற்றை ஜீயர்​கள் பெற்​றுக்​கொண்​டனர்.

இந்த மங்​கலப் பொருட்​களுக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன. அதன் பின்​னர் மாட வீதி​களில் ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டு, இவை கோயி​லில் ஒப்​படைக்​கப்​பட்​டன. இந்த மலர் மாலைகளும், கிளி​யும் இன்று இரவு நடை​பெற உள்ள கருடசேவை​யின் போது உற்​சவர் அணிவது ஐதீகம். இது வழக்​க​மான பவுர்​ணமி கருடசேவை​யில் இடம்​பெறாது என்​பது குறிப்​பிடத்தக்​கது.

இரு சக்கர வாக​னங்​களுக்கு தடை: கருடசேவையை முன்​னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இருசக்கர வாக​னங்​கள் செல்​வதற்​கான அனு​மதி ரத்து செய்​யப்​பட்​டது. 29-ம் தேதி திங்​கட்​கிழமை காலை 6 மணி முதல் வழக்​கம்​போல் பைக்​குகள் திரு​மலைப் பாதை​யில் அனு​ம​திக்​கப்​படும்.

கருட சேவையை முன்​னிட்டு பாது​காப்பு ஏற்​பாடு​களும் பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சுமார் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். ஆந்​திர போக்​கு​வரத்து கழக​மும் நேற்று முதல் திரு​மலைக்கு கூடு​தல் பேருந்​துகளை இயக்கி வரு​கிறது. இன்று காலை முதல் மாட வீதி​களில் பக்​தர்​கள் வீற்​றிருந்து கருடசேவையை காணும் வகை​யில் திருப்​பதி தேவஸ்​தானம் அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்​துள்​ளது. மாட வீதி​களில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் அமரலாம். அவர்​களுக்கு இன்று 14 வகை​யான உணவு​கள் வழங்​கப்பட உள்​ளன. மேலும் தண்​ணீர், டீ, காபி, மோர் என பானங்​களும் உடனுக்​குடன் வழங்​க​வும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

14 இடங்​களில் கருடசேவையை காணும் வகை​யில் ராட்சத தொலைக்​காட்​சிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து அன்​ன​தானம் வழங்​கப்பட உள்​ளது. லட்டு பிர​சாதம் தட்​டுப்​பாடு இன்றி கிடைக்க தின​மும் 8 லட்​சம் லட்​டு​கள் தயார் நிலை​யில் உள்​ளன. மேலும் நேற்று முதல் திரு​மலை மற்​றும் திருப்​ப​தி​யில் 2026-ம் ஆண்டு தேவஸ்​தான காலண்​டர்​கள், டைரி​கள்​ விற்​பனை​யும்​ தொடங்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x