Published : 27 Sep 2025 06:43 AM
Last Updated : 27 Sep 2025 06:43 AM

ஏழுமலையானுக்கு நன்கொடைகள் ஏராளம்: பக்தர்களின் மனம் தாராளம்

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் தாரள​மாக நன்​கொடைகளை தொடர்ந்து வழங்கி வரு​கின்​றனர். அது​போல் நன்​கொடை வழங்​கு​வோருக்​கு, அவர்​களின் நன்​கொடைக்​கேற்ப திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான​மும் தரிசனம் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களை செய்து கொடுத்து வரு​கிறது.

அதன் விவரங்​கள் வரு​மாறு: ஒவ்​வொரு ரூ. 10 ஆயிரம் நன்​கொடைக்​கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்​கப்​படு​கிறது. இதுவே ஒரு லட்​சம் ரூபாய் நன்​கொடை​யாக வழங்​கி​னால், அந்த பக்​தர் வாணி அறக்​கட்​டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அரு​கில் தரிசனம் செய்து கொள்​ளலாம்.

ரூ.5 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​கள், ஆண்​டுக்கு ஒரு​முறை சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக 5 பக்​தர்​களுக்கு தரிசன பாக்​கி​யம் வழங்​கப்​படும். ஒரு நாள் திரு​மலை​யில் தங்​கு​வதற்கு அறை​யும் வழங்​கப்​படும். மேலும், தரிசனம் முடிந்​ததும் சிறிய லட்டு பிர​சாதங்​கள் 6, ஒரு ரவிக்​கை, ஒரு துண்டு ஆகியவை வழங்​கப்​படும்.

ரூ.10 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​கள், ஆண்​டுக்கு 3 முறை 5 பக்​தர்​கள் சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக சுவாமியை தரிசிக்​கலாம். இவர்​களுக்கு திரு​மலை​யில் தொடர்ந்து 3 நாட்​கள் தங்​கு​வதற்கு வசதி​கள் செய்து தரப்​படும். மேலும், ஒவ்​வொரு முறை​யும் தரிசனம் செய்​யும்​போது, 10 சிறிய லட்டு பிர​சாதம், 5 மகா பிர​சாதம் வழங்​கப்​படும். இத்​துடன் ரவிக்​கை, துண்டு ஆகியவை வழங்​கப்​படும்.

ரூ.25 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​களுக்கு ஆண்​டுக்கு 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்​கப்​படும். மேலும் 3 நாட்​களுக்கு திரு​மலை​யில் தங்​கு​வதற்கு விடு​தி​யும் வழங்​கப்​படும். மேலும் 20 சிறிய லட்டு பிர​சாதங்​கள், 10 மகா பிர​சாதங்​கள், ஒரு ரவிக்​கை,ஒரு துண்​டு, 50 கிராம் எடை​யில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்​கப்​படும்.

ரூ.50 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​களுக்​காக ஆண்​டுக்கு 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்​கப்​படும். ஒரு முறை 5 பேருக்கு சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக சுவாமி தரிசனம் வழங்​கப்​படும். தரிசனம் முடிந்​ததும் இவர்​களுக்கு 4 பெரிய லட்டு பிர​சாதம், 5 சிறிய லட்டு பிர​சாதங்​கள், 10 மகா பிர​சாதங்​கள், ஒரு துண்​டு, ஒரு ரவிக்​கை, 5 கிராம் எடை​யில் தங்க நாண​யம், 50 கிராம் எடை​யில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்​கப்​படும்.

ரூ.75 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​களுக்​காக ஆண்​டுக்கு ஒரு நாள் 5 பேருக்கு சுப்​ர​பாத சேவை டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​படும். 3 முறை 5 பேருக்கு பிரேக் தரிசனம், 2 முறை சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக 5 பேர் சுவாமி தரிசனத்​துக்கு அனுப்பி வைக்​கப்​படு​வர்.

இவர்​களுக்கு 3 நாட்​கள் வரை திரு​மலை​யில் தங்​கும் அறை​கள் வழங்​கப்​படும். மேலும் 6 பெரிய லட்​டு​கள், 10 சிறிய லட்​டு​கள், 10 மகா பிர​சாதங்​களும் வழங்​கப்​படும். இது தவிர ரவிக்​கை, துண்​டு, 5 கிராம் எடை​யில் தங்க நாண​யம், 50 கிராம் எடை​யில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்​கப்​படும்.

ரூ.1 கோடி வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​களுக்கு ஆண்​டுக்கு 2 முறை 5 பேருக்கு சுப்​ர​பாத சேவை வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 முறை விஐபி பிரேக் தரிசன​மும், 3 முறை சுப​தம் நுழைவு​வா​யில் மூல​மாக சுவாமி தரிசன ஏற்​பாடு​களும் செய்​யப்​படும். திரு​மலை​யில் இவர்​கள் 3 நாட்​கள் தங்க வைக்​கப்​படு​வர். இவர்​களுக்கு ஒவ்​வொரு முறை​யும் 8 பெரிய லட்​டு, 15 சிறிய லட்​டு​கள்,10 மகா பிர​சாதங்​கள், ஒரு ரவிக்​கை,ஒரு துண்டு ஆகியவை வழங்​கப்​படும். ஆண்​டுக்கு ஒரு முறை இவர்​களுக்கு 5 கிராம் எடை​யில் தங்க நாண​யம், 50 கிராம் எடை​யில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்​கப்​படும்.

ரூ.1 கோடிக்​கும் மேல்​ நன்​கொடை வழங்​கும் பக்​தர்​களுக்கு ஆண்​டுக்கு 3 முறை 5 பேருக்கு சுப்​ர​பாத சேவை வழங்​கப்​படும். 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்​பாடு​கள் செய்​யப்​படும். 4 முறை 5 பேருக்கு சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக தரிசனம். 10 பெரிய லட்​டு​கள், 20 சின்ன லட்​டு​கள், 10 மகா பிர​சாதங்​கள், ஒரு துண்​டு, ஒரு ரவிக்கை ஆகியவை வழங்​கப்​படும்.

ஆண்​டுக்கு ஒரு முறை வேத பண்​டிதர்​களால் ஆசீர்​வாதம் செய்​யப்​படும். ஆண்​டுக்கு ஒரு​முறை 5 கிராம் எடை​யில் தங்க நாணய​மும், 50 கிராம் எடை​யில் வெள்ளி டாலரும் வழங்​கப்​படும். இது​மட்​டுமல்​லாமல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறக்​கட்​டளைக்கு நன்​கொடை வழங்​கி​னால்​, வரு​மான வரி 80 (ஜி)​யின்​ படி வரி விலக்​கு அவர்​களுக்​கு அளிக்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x