Published : 24 Sep 2025 07:43 AM
Last Updated : 24 Sep 2025 07:43 AM

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயில் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி சக்கர ஸ்நானத்​துடன் நிறைவடைய உள்​ளது.

பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்ல 24 மணி நேர​மும் திருப்​ப​தி​யில் இருந்து பேருந்து போக்​கு​வரத்து வசதி, தலை​முடி காணிக்​கை, மூல​வரின் தரிசனம், அன்​னபிர​சாதம், வாகன சேவை​களை கண்டு களிக்க மாட வீதி​களில் சிறப்பு வசதி​களை தேவஸ்​தானம் செய்​துள்​ளது. திரு​மலைக்கு வரும் பக்​தர்​கள் தங்​குவதற்கான அறை​கள் ரு.50 முதல் 600 வரை மிக குறைந்த வாடகைக்கு வழங்​கப்பட உள்​ளன. இதற்​காக திரு​மலை​யில் 3,500 அறை​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

இலவச மருத்​துவ சேவை: பக்​தர்​களின் நலனுக்​காக திரு​மலை​யில் தேவஸ்​தானத்​தின் அஸ்​வினி மருத்​து​வ​மனை​யில் போதிய மருத்​துவ வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தெற்கு மாட வீதி​யில் 10-12 படுக்கை வசதி கொண்ட சிறு மருத்​து​வ​மனை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. 8 ஆம்​புலன்​ஸ்​கள், 50 மருத்​து​வர்​கள், 60-க்​கும் மேற்​பட்ட பாராமெடிக்​கல் ஊழியர்​கள் 24 மணி நேர​மும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

இலவச பார்க்​கிங் வசதி: திரு​மலைக்கு பிரம்​மோற்சவ விழா​வினை காண கார்​கள், பைக்​கு​களில் வரும் பக்​தர்​களின் வசதிக்​காக இலவச பார்க்​கிங் வசதி ஆங்​காங்கே ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. திரு​மலை​யில் 24 மணி நேர​மும் 4 ஆயிரம் வாக​னங்​கள் பார்க்​கிக் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிக்​கிறது.

திரு​மலை​யில் 100 அடிக்கு ஒரு தகவல் மையம் என அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் பக்​தர்​கள் தமிழ், தெலுங்​கு, ஆங்​கிலம், கன்​னடம், இந்தி ஆகிய மொழிகளில் தங்​களின் சந்​தேகத்தை கேட்​கலாம். தலை​முடி காணிக்கை செலுத்த 1,150 சவர தொழிலா​ளர்​கள் நியமனம் செய்​யப்​படுள்​ளனர்.

பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள்: திருப்​பதி பிரம்​மோற்சவ விழா​விற்கு பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. 4,700 போலீ​ஸார், 2,000 தேவஸ்​தான விஜிலென்ஸ் ஊழியர்​கள், 450 சீனியர் போலீஸ் அதி​காரி​கள் பாது​காப்பு பணி​களில் ஈடுபட உள்​ளனர். 3,000 கண்​காணிப்பு கேம​ராக்​கள் நிறு​வப்​பட்டு உள்​ளன. தனி​யாக கமாண்ட் கண்ட்​ரோல் அறை தயார் நிலை​யில் உள்​ளது. பிரம்​மோற்சவ விழா​வினை காண வரும் பக்​தர்​களுக்கு மாட வீதி​களில் 14 வித​மான அன்​ன​தானம் விநி​யோகம் செய்​யப்பட உள்ளது.

ஒரே சமயத்​தில் 2 லட்​சம் பக்​தர்​கள் வாகன சேவை​களை கண்டு களிக்​கும் விதத்​தில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. மாத்ரு ஸ்ரீ தரி​கொண்டா வெங்​க​மாம்​பாள் அன்​ன​தான கூடத்​தில் தின​மும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து 15 மணி நேரத்​துக்கு பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்பட உள்​ளது.

பிரம்​மோற்சவ விழா​வினையொட்​டி, நேற்​றிரவு அங்​கு​ரார்ப்பன நிகழ்ச்சி ஆகம சாஸ்​திரத்​தின்​படி நடந்​தது. இதனை தொடர்ந்​து, ஏழு​மலை​யானின் சேனா​திப​தி​யாக கருதப்​படும் விஸ்​வக்​சேனர் ஆயுதங்​களை தாங்கி 4 மாட வீதி​களில் பவனி வந்து பிரம்​மோற்சவ ஏற்​பாடு​களை பார்​வை​யிட்​டார். பிரம்​மோற்​சவத்​தின் முதல் நாளான இன்று இரவு ஆதிசேஷ​னாக கருதப்​படும் பெரிய சேஷ வாகன சேவை நடை​பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x