Published : 23 Sep 2025 08:14 AM
Last Updated : 23 Sep 2025 08:14 AM

கொடியேற்றத்துக்கு தர்பை தயார்: திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத் துடன் தொடங்கவுள்ள நிலையில், நேற்று புனித தர்பையை ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர்.

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் நாளை (செப். 24) மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்க உள்​ளது. அக்​டோபர் 2-ம் தேதி வரை நடை​பெற உள்ள இந்த விழா​வில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்கேற்கின்றனர்.

நாளை புதன்​கிழமை மாலை கோயி​லில் உள்ள தங்க கொடி மரத்​தில் கருடன் சின்​னம் பொறித்த கொடி ஏற்​றப்​படு​கிறது. இதற்​காக கொடி மரத்​தில் சுற்​றி​லும் அமைக்​கப்பட உள்ள புனித தர்பை புற்​களை​யும் பிரம்​மோற்சவ கொடியை கட்​டு​வதற்​கான புனித கயிற்​றை​யும் நேற்று தேவஸ்​தான ஊழியர்​கள் ஊர்​வல​மாக கொண்டு வந்து அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர்.

பின்​னர் அவற்​றுக்கு பூஜை கள் செய்​யப்​பட்​டு, கோயி​லில் உள்ள ரங்​க​நாயக மண்​டபத்​தில் ஆதிசேஷ​னாக கருதப்​படும் பெரிய சேஷ வாக​னத்​தில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

பிரம்​மோற்​சவம் நாளை தொடங்​கு​வதை முன்​னிட்​டு, இன்று செவ்​வாய்க்​கிழமை மாலை, வைகானச ஆகம விதி​களின்​படி ஏழு​மலை​யான் கோயி​லில் அங்​கு​ரார்ப்பண நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

இதையடுத்து ஏழு​மலை​யானின் படைத் தளபதி என்று அழைக்​கப்​படும் விஸ்​வக்​சேனர், பிரம்​மோற்சவ ஏற்​பாடு​களை ஆய்வு செய்​யும் ஐதீகம் அடிப்​படை​யில் ஆயுதங்​களை ஏந்தி மாட வீதி​களில் உலா வரு​வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x