Published : 21 Sep 2025 12:44 AM
Last Updated : 21 Sep 2025 12:44 AM

நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு - கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்

பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்த நேற்று யானை மற்றும் பல்லக்குகளில் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடான சுவாமி விக்ரகங்கள்.

நாகர்கோவில்: திரு​வனந்​த​புரம் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, குமரி மாவட்​டத்​திலிருந்து சுவாமி விக்​ரகங்​கள் புறப்​பாடை முன்​னிட்டு பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில், மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள் மாற்​றும் பாரம்​பரிய நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

திரு​வனந்​த​புரம் அரண்​மனை​யில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, கன்​னி​யாகுமரி மாவட்​டம் சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன், வேளிமலை குமாரசு​வாமி, தேவாரக்​கட்டு சரஸ்​வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்​ரகங்​கள், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​படும்.

இந்த ஆண்டு நவராத்​திரி விழா வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது. இவ்​விழா​வில் பங்​கேற்க சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன் நேற்று முன்​தினம் காலை​யில் சுசீந்​திரத்​திலிருந்து பல்​லக்​கில் புறப்​பா​டாகி, மாலை​யில் பத்​ம​நாபபுரம் நீல​கண்ட சுவாமி கோயிலை அடைந்​தார். நேற்று அதி​காலை​யில் வேளிமலை குமாரசு​வாமி விக்​ரகம், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் உள்ள தேவாரக்​கட்டு சரஸ்​வதி அம்​மன் கோயிலை வந்​தடைந்​தது. திரு​வி​தாங்​கூர் சமஸ்​தான மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள், சுவாமி ஊர்​வலத்​தின் முன்​னால் கொண்டு செல்​லப்​படும்.

பத்​ம​நாபபுரம் அரண்​மனை உப்​பரிகை மாளி​கை​யில் நேற்று காலை 7.30 மணி​யள​வில் நடை​பெற்ற விழா​வில், மன்​னரின் உடை​வாளை கேரள தொல்​லியல் துறை அமைச்​சர் கடனப்​பள்ளி ராமச்​சந்​திரன், குமரி மாவட்ட திருக்​கோ​யில்​களின் இணை ஆணை​யர் ஜான்சி ராணி​யிடம் ஒப்​படைத்​தார். அதை, அவர் பத்​ம​நாபபுரம் அரண்​மனை ஊழியர் மோக​னகு​மாரிடம் வழங்​கி​னார். அப்​போது, தமிழக, கேரள போலீ​ஸார் அணிவகுப்பு மரி​யாதை செலுத்​தினர். நிகழ்ச்​சி​யில், விஜய்​வசந்த் எம்​.பி., அமைச்​சர் மனோதங்​க​ராஜ், குமரி ஆட்​சி​யர் அழகுமீ​னா, எஸ்​.பி. ஸ்டா​லின், கேரள எம்​எல்​ஏக்​கள் ஹரீந்​திரன், வின்​சென்ட், பத்​ம​நாபபுரம் சார் ஆட்​சி​யர் வினய்​கு​மார் மீனா கலந்​து​கொண்​டனர்.

உடை​வாள் கைமாறியதும் தேவாரக்​கட்டு சரஸ்​வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன. யானை மீது சரஸ்​வதி தேவி விக்​ரகம், பல்​லக்​கு​களில் சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்​கை, வேளிமலை முரு​கன் விக்​ரகங்​கள் வீற்​றிருக்க பெண்​களின் தாலப்​பொலி​யுடன் நவராத்​திரி விழா ஊர்​வலம் திரு​வனந்​த​புரத்​துக்கு புறப்​பட்​டது. சுவாமி விக்​கிரகங்​கள் இன்று (21-ம் தேதி) களியக்​கா​விளை எல்​லையை சென்​றடைகின்​றன. அங்​கு, கேரள ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் முன்​னிலை​யில் கேரள போலீ​ஸார் மற்​றும் அதி​காரி​களிடம் விக்​ரகங்​கள் ஒப்​படைக்​கப்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x