Published : 20 Sep 2025 05:57 AM
Last Updated : 20 Sep 2025 05:57 AM

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், மயி​லாப்​பூரில் மாபெரும் கொலு​வுடன் நவராத்​திரி பெரு​விழா செப்​.22-ம் தேதி முதல் 10 நாட்​கள் நடை​பெறுகிறது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலை​யத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: உலகில் தீமை​களை அழித்து தர்​மத்தை நிலை நாட்​டும் சக்தி வழி​பாட்​டின் தத்​து​வங்​களை உணர்த்​தும் தொடர்​நிகழ்​வாக கொண்​டாடப்​படும் நவராத்​திரி பெரு​விழா​, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் திருமண மண்​டபத்​தில் மாபெரும் கொலு​வுடன் செப்​.22-ம் தேதி முதல் அக்​.1-ம் தேதி வரை 10 நாட்​கள் கொண்​டாடப்பட உள்​ளது.

ஒவ்​வொரு நாளும் மாலை​யில் சிறப்பு வழி​பாடும், இசை மற்​றும் கலை நிகழ்ச்​சிகளும் நடத்​தப்​படு​கின்​றன. நவராத்​திரி விழா​வின் முதல் நாள் நிகழ்ச்​சி​யாக, செப்​.22-ம் தேதி விநாயகர் அகவல் மற்​றும் அபி​ராமி அந்​தா​தி​யுடன் சுசித்ரா பாலசுப்​பிரமணி​யத்​தின் பக்தி இசை நிகழ்ச்​சி​யுடன் தொடங்​கு​கிறது.

இதையடுத்து, நாள்​தோறும் ஒரு வழி​பாட்​டுடன், எச்​.சூரிய​நா​ராயணன், அருணா மற்​றும் அன்பு குழு​வினரின் பக்தி இசை, மால​தி, முத்​துசிற்பி மற்​றும் கீர்த்​த​னாஸ் குழு​வினரின் பக்தி இசை, தேசிய விருது பெற்ற ஆர்​.​காஷ்யப மகேஷ் குழு​வினரின் பக்தி இசை, நாட்​டிய சிரோன்​மணி உமா தினேஷ் – சாய் முத்ரா நடன குழு​வினரின பரத நாட்​டி​யம் நடை​பெறுகிறது.

மேலும், ரிஷிப்​ரியா குருபிர​சாத் குழு​வினரின் பக்தி இசை, தேச மங்​கையர்க்​கரசி​யின் ஆன்​மிக சொற்​பொழி​வு, நிருத்ய நாட்​டி​யாலயா மற்​றும் ஸ்ரீஞான​முத்ரா அகாடமி குழு​வினரின் பரதம், சியாமளா, சஜினி மற்​றும் ரிதம் குழு​வினரின் பக்தி இசை, வேல்​முரு​கன், சும​திஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்​சி​யம், விநாயகா நாட்​டி​யால​யா​வின் பரதம், கோபிகா வர்​மாசின் மோகினி ஆட்​டம், வீரமணி ராஜு குழு​வினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்​சிகள் நடை​பெறவுள்​ளன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x