Published : 15 Sep 2025 07:09 AM
Last Updated : 15 Sep 2025 07:09 AM

4 வேதங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஜோதிட முனைவர் கே.பி.​வித்யாதரன் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் நடைபெற்ற வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார மாநாட்டின் 2-வது நாளான நேற்று ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனை கவுரவித்தார் காஞ்சி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள். உடன், சென்னை வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஷ் கடவுள், அருணாச்சலேஸ்வரர் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் உள்ளிட்டோர்.

திரு​வண்​ணா​மலை: நான்கு வேதங்​களை​யும் பாடத் திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என்று ஜோதிட முனை​வர் கே.பி.​வித்​யாதரன் கூறி​னார். திரு​வண்​ணா​மலை கிரிவலப் பாதை​யில் வேதாகம தேவார ஆன்​மிக கலாச்​சார மாநாடு நேற்று நிறைவடைந்​தது. இரண்டு நாட்​கள் நடை​பெற்ற இம்​மா​நாட்​டின் 2-வது நாளான நேற்று காலை 1,008 மகளிர் பங்​கேற்ற திரு​விளக்கு பூஜை, சுமங்​கலிப் பிரார்த்​தனை நடை​பெற்​றது.

அண்​ணா​மலை​யார் கோயில் இளவரசு பட்​டம் பி.டி.ரமேஷ் குருக்​கள் தலைமை வகித்​தார். சென்னை வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீஜெகதீஷ் கடவுள் முன்​னிலை வகித்​தார். சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற காஞ்சி பீடா​திபதி ஸ்ரீசங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சங்​க​ராச்​சா​ரியா சுவாமிகள் திரு​விளக்கு பூஜையைத் தொடங்கி வைத்து அருளாசி வழங்​கி​னார்.

அவர் பேசி​ய​தாவது: அம்​மன் அருள் நம்மை கவச​மாக இருந்து பாது​காக்​கிறது. அம்​பாள் நமது அனைத்து வியா​தி​களை​யும் நீக்​கி, செல்​வங்​களை​யும், ஞானத்​தை​யும் அளித்து வரு​கிறார். அஷ்ட​மி, நவமி, சதுர்​தசி, அமா​வாசை, பவுர்​ணமி நாட்​களில் அம்​பாளை தரிசிப்​பது மிக​வும் சிறப்​பானது. ஒரு​வர் எப்​படி வாழ வேண்​டும், படிக்க வேண்​டும், இல்​லறம் நடத்த வேண்​டும் என்​ப​தற்கு பாரத தேசம் எடுத்​துக்​காட்​டாகத் திகழ்​கிறது.

நமது தேசம் மேலும் வளர வேண்​டும். அதற்கு நமது கலாச்​சா​ரம் வளர வேண்​டும். அந்த உயர்ந்த கலாச்​சா​ரத்​தைப் பராமரிப்​ப​தற்​கு, பாது​காப்​ப​தற்​கு, வளர்ப்​ப​தற்கு உரிய கல்வி மற்​றும் ஆன்​மிக கல்​வியைக் குழந்​தைகள் அனை​வருக்கும் கற்​றுத்​தந்​து, கோயில்​களுக்கு அழைத்​துச் செல்ல வேண்​டும். பக்​திப் பூர்​வ​மாக வளர்த்​து, சிறந்​தவர்​களாக உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஜோதிட முனை​வர் கே.பி.​வித்​யாதரன் பேசும்​போது, “திரு​வாரூரில் பிறந்​தா​லும், காசி​யில் உயி​ரிழந்​தா​லும் முக்தி கிடைக்​கும் என்​பார்​கள். ஆனால், அண்​ணா​மலை​யாரை நினைத்​தாலே முக்தி கிடைக்​கும். அப்​படிப்​பட்ட இந்​தப் புண்​ணிய ஸ்தலத்​தில் அற்​புத​மாக நமது கலாச்​சார மாநாடு நடந்​துள்​ளது. மகரிஷிகள் நமக்கு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்​களை கொடுத்​துச் சென்​றுள்​ளார்​கள். இவற்றை எல்​லாம் மீண்​டும் நமது பாடத் திட்​டத்​தில் கொண்​டுவர வேண்​டும். அவற்றை குழந்​தைகள் கற்​றுக்​கொள்ள வேண்​டும்.

மேல்​நாட்​டில் இந்த வேதங்​களை நன்கு படித்​து, அவர்​கள் வாழ்​கை​யில் பின்​பற்றி வரு​கிறார்​கள். நமது பண்​பாடு, கலாச்​சா​ரத்​தைப் பாது​காத்​தாலே நமக்கு எல்​லாம் கிடைத்​து​விடும். சபரிமலை மகர ஜோதி, வடலூரில் வள்​ளலார் ஏற்​றி​வைத்த தைப்​பூச ஜோதி போன்​றவை பெரிய ஜோதி​களாகும். ஆனால், அவற்​றுக்கு எல்​லாம் மேலான ஜோதி​யாக​வும், அருட்​பெரும் ஜோதி​யாக​வும் இருக்​கக் கூடியது திரு​வண்​ணா​மலை கார்த்​திகை தீப ஜோதி​யாகும். இந்த அற்​புத​மான நிகழ்ச்​சிகளை நாம் உலகெங்​கும் கொண்டு செல்ல வேண்​டும்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், சென்னை தொழில​திபர் பி.சக்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற நீதிபதி எஸ்​.ஸ்ரீம​தி, முன்​னாள் நீதிப​தி​கள் எஸ்​.​வைத்​தி​ய​நாதன், ஆர்​.சுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். தொடர்ந்​து, இளவரசு பட்​டம் பி.டி.ஆர்​.கோகுல் குருக்​கள் எழு​திய அருணாச்சல தீர்த்த மகிமை என்ற நூல் வெளி​யிடப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x