Published : 08 Sep 2025 06:15 AM
Last Updated : 08 Sep 2025 06:15 AM

பெசன்ட்​ நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 53-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேர் பவனி நடைபெற்றது. (உள்படம்) தேரில் பவனி வந்த மாதா. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: பெசன்ட்​ நகர் அன்னை வேளாங்​கண்ணி ஆலயத்​தில் தேர் பவனி கோலாகல​மாக நடை​பெற்​றது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்​கண்ணி மாதா ஆலயத்​தில், மாதா​வின் பிறந்​த​ நாளை முன்​னிட்டு ஆண்​டு​தோறும் 10 நாட்​கள் பெரு​விழா நடை​பெறு​வது வழக்​கம். 53-வது ஆண்டு பெரு​விழா, கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இதைத் தொடர்ந்து பக்த சபைகள் விழா, நற்​கருணை பெரு​விழா, தேவ அழைத்​தல் விழா, உழைப்​பாளர்​கள் விழா, சுற்​றுச்​சூழல் பாது​காப்பு விழா, ஆசிரியர்​கள் விழா, குடும்ப விழா, அன்​னை​யின் பிறப்பு பெரு​விழா என ஒவ்​வொரு நாளும் சிறப்பு திருப்​பலிகளும், ஜெப வழி​பாடு​களும் காலை​யி​லிருந்து மாலை வரை தொடர்ந்து நடை​பெற்​றது.

விழா​வின் முக்​கிய நாளான நேற்று தேர் பவனி நடந்​தது. மாலை நடந்த கூட்​டுத் திருப்​பலி​யில், சென்னை - மயிலை உயர்​மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்​தோணி​சாமி பேசி​னார். கூட்​டுத் திருப்​பலியை தொடர்ந்​து, தேர் பவனியை பேராயர் தொடங்கி வைத்​தார். அலங்​கரிக்​கப்​பட்ட மாதா தேர் பவனி, பெசன்ட் நகர் ஆலய வளாகத்​தில் இருந்து புறப்​பட்​டது. தேர் பவனி​யில் பங்​கேற்ற பக்​தர்​கள், மரியே வாழ்க என கோஷம் எழுப்​பினர்.

வேளாங்​கண்ணி மாதா ஆலயத்​தில் தொடங்கி பெசன்ட் நகர் கடற்​கரை சாலை, ஆல்​காட் பள்​ளி, பெசன்ட் நகர் டிப்போ வழி​யாக சுமார் 4 கிலோ மீட்​டர் தொலை​வுக்கு தேர் பவனி சென்று மீண்​டும் மாதா ஆலயத்தை அடைந்​தது. விழா​வின் இறுதி நாளான இன்​று, அன்​னை​யின் பிறந்த நாள் கொண்​டாடப்​படு​கிறது. இதில், காலை நடை​பெறும் திருப்​பலி​யில், அன்​னைக்கு முடிசூட்டு விழா நடை​பெற உள்​ளது. மாலை கொடி​யிறக்​கத்​துடன் பெரு​விழா இன்​றுடன் நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x