Published : 08 Sep 2025 07:03 AM
Last Updated : 08 Sep 2025 07:03 AM

‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ முழக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​ கொண்​டனர். நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா ஆக. 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சிறப்பு பிரார்த்​தனை, நவநாள் திருப்​பலி, மாதா மன்​றாட்​டு, நற்​கருணை ஆசி உள்​ளிட்​டவை நடை​பெற்​றன.

இந்​நிலை​யில், விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை​பெற்​றது. இதையொட்​டி, பேராலய கலை​யரங்​கில் மாலை புதுச்​சேரி - கடலூர் உயர் மறை​மாவட்ட பேராயர் பிரான்​சிஸ் கலிஸ்ட் தலை​மை​யில் கூட்​டுப் பாடல் திருப்​பலி நடை​பெற்​றது. பின்​னர், மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்ட பெரிய தேரை பேராயர் பிரான்​சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்​து​ வைத்​தார். தொடர்ந்​து, பெரிய தேரில் புனித ஆரோக்​கிய அன்னை எழுந்​தருளி​னார்.

பெரிய தேரின் முன்பு 6 சிறிய தேர்​களில் மிக்​கேல், சம்​மனசு, செபஸ்​தி​யார், அந்​தோனி​யார், சூசையப்​பர், உத்​திரிய மாதா ஆகியோர் எழுந்​தருளினர். இதையடுத்​து, லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் மத்​தி​யில் பெரிய தேர் உள்​ளிட்ட தேர்​கள் புறப்​பட்டு கடற்​கரை சாலை, ஆரிய​நாட்டு தெரு வழி​யாக மீண்​டும் பேரால​யத்தை வந்​தடைந்​தன. அப்​போது, ‘மரியே வாழ்​க’, ‘ஆவே மரி​யா’ என பக்​தர்​கள் முழக்​கமிட்​டனர்.

விழா​வில், பேராலய அதிபர் இருதய​ராஜ், பங்​குத் தந்தை அற்​புத​ராஜ், பொருளாளர் உலக​நாதன், உதவி பங்​குத் தந்​தைகள் ஆரோ ஜேசு​ராஜ், லூர்து சேவியர், ஆரோக்​கிய பரிசுத்​த​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

விண்​மீன் ஆலயத்​தில் இன்று காலை மயிலை உயர் மறை​மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்​தோனி​சாமி தலை​மை​யில் அன்​னை​யின் பிறப்பு விழா நடை​பெறுகிறது. மாலை கொடி இறக்​கப்​பட்​டு, பெரு​விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி நாகை மாவட்​டத்​துக்கு இன்று உள்​ளூர் விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், வேளாங்​கண்​ணி​யில் இருந்து சிறப்பு பேருந்​துகள்​, ரயில்​கள்​ இயக்​கப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x