Published : 08 Sep 2025 06:38 AM
Last Updated : 08 Sep 2025 06:38 AM

சந்​திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது

திருமலை: சந்​திர கிரகணத்​தையொட்டி பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நடை நேற்று பிற்​பகல் 3:30 மணிக்கு சாத்​தப்​பட்​டது. சந்​திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணி முதல் திங்​கட்​கிழமை அதி​காலை 1.31 மணி வரை நடை​பெற்​றது. இது இந்​தியா முழு​வதும் காணப்​பட்​டது.

சந்​திர கிரகணத்​தையொட்டி பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நடை நேற்று மதி​யம் 3.30 மணி அளவில் சாத்​தப்​பட்​டது. அதன் பின்​னர் முழு சந்​திர கிரகணம் நிறைவு அடைந்​ததை தொடர்ந்​து, அதி​காலை கோயில் முழு​வதும் சுத்​தம் செய்​யப்​பட்டு 3 மணிக்கு சுப்​ர​பாத சேவையை தொடர்ந்து பக்​தர்​கள் வழக்​கம்​போல் சுவாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்​பாக அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு நேற்று பேசி​ய​தாவது: சந்​திர கிரகணத்​தையொட்டி ஆகம விதி​களின்​படி திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் உட்பட திருப்​பதி தேவஸ்​தானத்​திற்கு சொந்​த​மான அனைத்து கோயில்​களிலும் நடை சாத்​தப்​பட்​டது. திரு​மலை​யில் வைகுண்​டம் கியூ காம்ப்​ளக்​ஸில் உள்ள பக்​தர்​களுக்கு மட்​டுமின்​றி, வெளியே திரு​மலை​யில் சுமார் 50,000 புளியோதரை பாக்​கெட்​டு​கள் மற்​றும் தண்​ணீர் போன்​றவை பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்​டன. திங்​கட்​கிழமை அதி​காலை 3 மணி முதல் பக்​தர்​கள் சுவாமி தரிசனத்​திற்கு வழக்​கம் போல் அனு​ம​திக்​கப்​படு​வர்​ என தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x