Published : 01 Sep 2025 07:55 AM
Last Updated : 01 Sep 2025 07:55 AM

ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு

கடலூர்: ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு நடை​பெற்​றது.

ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் 27-வது வைஷ்ணவ மாநாடு கடலூர் திருப்​பா​திரிப்​புலியூர் தனி​யார் மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநாட்டை முன்​னிட்டு கருட கொடியை கோ.லட்​சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்​தார். அரவிந்​தன் சுவாமி திரு​மால் வணக்​கம் பாடி​னார். சபா தலை​வர் சே.ஸ்ரீதர் ராமானுஜ தாசன் வரவேற்​றார். பொருளாளர் பி.எஸ். வெங்​கடேசன் ஆண்​டறிக்கை சமர்ப்​பித்​தார்.

ஆன்மிக சொற்பொழிவு: திருக்​கோ​விலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்​து, மங்களா சாசனம் வழங்​கி​னார். ‘ஆகமத்​தில் ஆனந்​தன்’ என்ற தலைப்​பில் திருச்சி ஸ்ரீரங்​கம் ராமன் பட்​டாச்​சா​ரி​யார் ஸ்வாமி, ‘திரு​நாம வைபவம்’ என்ற தலைப்​பில் திரு​வல்​லிக்​கேணி ஸ்ரீநி​வாஸாச்சாரியார் ஸ்வாமி, ‘கள்​ளனும் குள்​ளனும்’ என்ற தலைப்​பில் தூத்​துக்​குடி சடஜித் சுவாமி, ‘ வைஷ்ணவ லக் ஷணம்’ என்ற தலைப்​பில் திருச்சி ஸ்ரீரங்​கம்
உ.வே.ஸாரதி தோத்​தாரி ஸ்வாமி, ‘கொண்​டாட்​டம்’ என்ற தலைப்​பில் ஸ்ரீரங்​கம் உ.வே.வகுளாபரணன் ஸ்வாமி ஆகியோர் சொற்​பொழிவு நிகழ்த்​தினர்.

சபா செய​லா​ளர் இரா. இளங்​கோவன் நன்றி கூறி​னார். நிகழ்வை வளவதுரையன் ஒருங்​கிணைத்து வழங்​கி​னார். இதில் ஏராள​மான வைஷ்ணவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x