Published : 24 Aug 2025 12:39 AM
Last Updated : 24 Aug 2025 12:39 AM

மேல்மலையனூர் கோயிலில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தைக் காணத் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

விழுப்புரம்: மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர்.

விழுப்​புரம் மாவட்​டம் மேல்​மலை​யனூர் கிராமத்​தில் பிரசித்தி பெற்ற அங்​காளம்​மன் கோயி​லில் ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதையொட்​டி, அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, மூல​வ​ரான அங்​காளம்​மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்​ளிட்ட பொருட்​களைக் கொண்டு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு தங்​கக் கவசம் அணி​வித்து மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, மங்கல இசை ஒலிக்க, வடக்கு வாசல் வழி​யாக வந்து ஊஞ்​சல் மண்​டபத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் அங்​காளம்​மன் எழுந்​தருளி அருள்​பாலித்​தார். அப்​போது அங்​காளம்​மனை போற்றி கோயில் பூசா​ரி​கள் தாலாட்​டுப் பாடல்​களை பாடினர். அம்​மனுக்கு தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது. ஊஞ்​சல் மண்​டபத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர். நள்​ளிரவு ஊஞ்​சல் உற்​சவம் நிறைவு பெற்​றதும், கோயிலுக்கு உற்​சவர் அங்​காளம்​மன் கொண்டு செல்​லப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x