Published : 24 Aug 2025 12:25 AM
Last Updated : 24 Aug 2025 12:25 AM

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவை ஒட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்.

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர்.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆவணித் திரு​விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சுவாமி குமர​விடங்க பெரு​மானும், வள்​ளி​யம்​மனும் தனித்​தனி வாக​னங்​களில் வீதி​யுலா சென்​றனர்.

விழா​வின் 10-ம் நாளான நேற்று தேரோட்​டம் நடந்​தது. இதையொட்​டி, அதி​காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டு, விஸ்​வரூப தீபா​ராதனை, உதய மார்த்​தாண்ட அபிஷேகம் நடை​பெற்​றன. வள்​ளி, தெய்​வானை அம்​மன்​களு​டன் சுவாமி குமர​விடங்க பெரு​மான் தேரில் எழுந்​தருளி​னார்.

காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்​பட்டு நான்கு ரதவீ​தி​களை​யும் சுற்றி வந்​தது. பின்​னர், சுவாமி குமர​விடங்க பெரு​மான், வள்​ளி, தெய்​வானை அம்​மன் எழுந்​தருளிய தேரை பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். இந்த தேர் ரதவீ​தி​கள் சுற்றி வந்த பின்​னர் நிலையை வந்​தடைந்​தது. தொடர்ந்​து, வள்​ளி​யம்​மன் மட்​டும் வீற்​றிருந்த தேர் புறப்​பட்டு ரதவீ​தி​களை வலம் வந்​து, மீண்​டும் நிலைக்கு வந்து சேர்ந்​தது.

தூத்​துக்​குடி மாவட்ட நீதிபதி வஷித்​கு​மார், அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் ஞான​சேகரன், ஓய்​வு​பெற்ற கால்​நடைத் துறை உதவி இயக்​குநர் பாலசுப்​பிரமணிய ஆதித்​தன் மற்​றும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர். திருச்​செந்​தூர் டி.எஸ்​.பி. மகேஷ்கு​மார் தலை​மை​யில் ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் தக்​கார் அருள்​முரு​கன், இணை ஆணை​யர் ஞான​சேகரன் மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x