Published : 22 Aug 2025 08:50 AM
Last Updated : 22 Aug 2025 08:50 AM

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளிக்கும் பக்தர்

திரு​மலை: திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு விரை​வில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளி​யிட விரும்​பாத ஒரு பக்​தர் காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறியதாவது: ஏழு​மலை​யானின் தீவிர பக்​தர்​களில் ஒரு​வர் ஒரு நிறு​வனத்தை தொடங்​கி​னார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்​டி​னார். 60 சதவீத விற்​பனை​யிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்​தது. இதனால் அந்த பக்​தர், இதெல்​லாம் திருப்​பதி ஏழு​மலை​யானின் கருணை என்​பதை உணர்ந்​து, ஏழு​மலை​யானுக்கு 121 கிலோ எடை​யில் தங்க ஆபரணங்​களை வழங்க முடிவு செய்​தார்.

இது குறித்து அந்த பக்​தர் என்னை நேரடி​யாக சந்​தித்து ஒரு கடித​மும் கொடுத்​தார். அப்​போது தன்​னுடைய பெயரை மட்​டும் வெளி​யிட வேண்​டாம் என கேட்​டுக்​கொண்​டார். திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் 120 கிலோ தங்க ஆபரணங்​கள் அணிவிக்​கப்​படு​வதை அப்​போது நான் அவரிடம் எடுத்​துரைத்​தேன்.

அப்​போது அவர் ஆச்​சரியப்​பட்​டார். எனக்கு 121 கிலோ எடை​யில் சுவாமிக்கு ஆபரணம் வழங்க நினைத்​தேன். அப்​படி​யெனில் அவர் அணி​யும் ஒரு நாள் ஆபரண எடையை விட ஒரு கிலோ எடை அதி​க​மாகவே வழங்​கு​கிறேன் என மகிழ்ச்​சி​யுடன் கூறி​னார். இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறி​யுள்​ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில்
வைர கவச அலங்காரத்தில்
பவனி வரும் உற்சவர் மலையப்பர்.

தற்​போது அந்த பக்​தர் யார்? எனும் கேள்வி அனை​வருக்​கும் எழுந்​துள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு சக்​கர​வர்த்​தி​கள், சேர, சோழ, பாண்​டிய, பல்​ல​வர் அரசர்​கள், பல குறுநில மன்​னர்​கள், சாளுக்​கியர்​கள், மஹந்​துக்​கள் என அரசர் காலம் முதல் தற்​போதைய அம்​பானி காலம் வரை பலர் தங்​கம், வைரம், வெள்ளி பொருட்​களை காணிக்​கை​யாக வழங்கி உள்​ளனர்.

இவை இன்​றும் பிரம்​மோற்​சவம் போன்ற விசேஷ நாட்​களில் உற்​வச​ரான மலை​யப்​பர் அணிந்து வீதி உலா வரு​வதை பக்​தர்​கள் தரிசித்து வரு​கின்​றனர். சமீப கால​மாக அதி​க​மாக தங்க நகைகளை பக்​தர்​கள் காணிக்​கை​யாக வழங்​கு​வ​தால், திருப்​பதி தேவஸ்​தானம் சில நிபந்​தனை​களை விதித்​துள்​ளது. முன்​கூட்​டியே தக்க அனு​மதி பெற்ற பின்​னர் தான் தங்​கம், வைரம் ஆபரணங்​களை பக்​தர்​கள் காணிக்​கை​யாக வழங்க வேண்​டும் என வலி​யுறுத்தி உள்​ளது.

இது மட்​டுமல்​லாமல் ஆண்​டுக்கு ஒரு டன்​னுக்​கும் மேல் உண்​டியல் மூல​மாக மட்​டுமே ஏழு​மலை​யானுக்கு தங்க நகைகளை பக்​தர்​கள் காணிக்​கை​யாக செலுத்தி வரு​கின்​றனர். சுவாமிக்கு உள்ள ஆபரணங்​களை தவிர உண்​டியலில் பக்​தர்​கள் செலுத்​தும் ஆபரணங்​கள் தற்​போது அரசு வங்​கி​களில் டெபாசிட் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

கடந்த 23.5.2010-ல் 1075 கிலோ தங்​கத்தை திருப்​பதி திரு​மலை தேவஸ்​தான அதி​காரி​கள் டெபாசிட் செய்​தனர். 2022 செப்​டம்​பர் 30-ம் தேதி நில​வரப்​படி திருப்​பதி ஏழு​மலை​யான் பெயரில் 10,258 கிலோ தங்க நகைகள்​ பல அரசு வங்​கி​களில்​ டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் வைர கவச அலங்காரத்தில் பவனி வரும் உற்சவர் மலையப்பர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x