Published : 05 Aug 2025 05:55 AM
Last Updated : 05 Aug 2025 05:55 AM

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தரின் தலையில் தேங்காய் உடைத்த கோயில் பூசாரி. | படம்: க.ராதாகிருஷ்ணன் |

கரூர்: கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் வட்​டம் மேட்டு மகா​தானபுரம் மகாலட்​சுமி அம்​மன் கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆடிப் பெருக்​குக்கு மறு​நாள் 19-ம் தேதி​யன்​று, பக்​தர்​கள் தலை​யில் தேங்​காய் உடைக்​கும் நிகழ்ச்சி நடை​பெறு​வது வழக்​கம்.

இவ்​விழாவையொட்டி காவிரி ஆற்​றில் இருந்து நேற்று முன்​தினம் தீர்த்​தம் ஊர்​வல​மாகக் கொண்டு வரப்​பட்டு அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, இரவு அம்​மன் காவிரி ஆற்​றில் தீர்த்​த​வாரிக்கு எழுந் தருளி​னார். நேற்று 500-க்​கும் மேற்பட்ட பக்​தர்​கள் முடி காணிக்கை செலுத்​தி​விட்டு வரிசை​யாக அமர்ந்​திருந்​தனர்.

அதைத்​தொடர்ந்து கோயில் பரம்​பரை பூசாரி பெரிய​சாமி, பாதக்​குரடு (ஆணி செருப்​பு) அணிந்​து, அம்பு போட்​ட​வுடன் (இரும்​புப் பட்டை கம்​பி​யால் அடித்​துக் கொள்​ளுதல்) அருள் பெற்​று, பக்​தர்​களின் தலை​யில் தேங்​காய் உடைத்​தார்.

இதில், சிலருக்கு தலை​யில் காயம் ஏற்​பட்டு ரத்​தம் கசிந்​தது. அவர்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் தலை​யில் மஞ்​சள் வைக்கப்பட்​டது. சற்று அதிக காயமடைந்த பக்​தர்​களுக்கு அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த மருத்​துவ முகாமில் தலை​யில் தையல் போடப்​பட்​டது.

இவ்​விழா​வில், இந்து சமய அறநிலையத் துறை திருப்​பூர் இணை ஆணை​யர் ரத்​னவேல் பாண்​டியன், கரூர் உதவி ஆணை​யர் ரமணி​காந்​தன், செயல் அலு​வலர் நரசிம்​மன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x