Published : 04 Aug 2025 05:43 AM
Last Updated : 04 Aug 2025 05:43 AM

ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்: அம்மன் கோயில்களில் ஏராளமானோர் வழிபாடு

சென்னை: சென்​னை​யில் மெரினா கடற்​கரை மற்​றும் நீர்​நிலை பகு​தி​களில் ஏராள​மான மக்​கள் குவிந்து நேற்று ஆடிப்​பெருக்கு விழாவை உற்​சாகத்​துடன் கொண்​டாடினர். புதிய தாலி மாற்​றிக்​கொண்டு வழி​பாடு செய்​தனர்.

ஆண்​டு​தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்​பெருக்கு விழா கொண்​டாடப்​படு​கிறது. நீர்​வளம் பெரு​கி, பயிர்​கள் செழிக்க வேண்டும், மக்​கள் வளம் பெற வேண்​டும் என்று பிரார்த்​தித்​து, ஆறு, குளம் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் மக்​கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடு​வார்​கள்.

தமிழகத்​தில் திருச்சி காவிரி கரை, மதுரை வைகை ஆற்​றங்​கரை, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் தாமிரபரணி ஆற்றங்​கரை உள்​ளி்ட்ட இடங்​களில் ஆடிப்​பெருக்கு விழா நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது.

சென்​னை​யில் மெரி​னா, பெசன்ட் நகர், திரு​வான்​மியூர், கோவளம் கடற்​கரை பகு​தி​கள், ஏரிக்​கரைகளில் மக்​கள் ஏராள​மாக குவிந்து ஆடிப்​பெருக்கு விழாவை கொண்​டாடினர். புத்​தாடை உடுத்தி வந்த புதுமண தம்​ப​தி​யர், தாலியை மாற்​றிக்​கொண்டு வழிபாடு நடத்​தினர். திரு​மணம் ஆகாத இளம்​பெண்​கள், மஞ்​சள் சரடு அணிந்து பிரார்த்​தனை செய்​து, சர்க்​கரைப் பொங்​கல் படையலிட்டு வழிபட்​டனர்.

ஆடிப்​பெருக்கை ஒட்டி மயி​லாப்​பூர் கோல​விழி அம்​மன், முண்​டகக்​கண்ணி அம்​மன், பாரி​முனை காளி​காம் ​பாள், கீழ்ப்​பாக்​கம் பாதாள பொன்​னி​யம்​மன், திரு​வொற்​றியூர் வடிவுடை​யம்​மன் உட்பட பல்​வேறு கோயில்​களி​லும் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. ஏராள​மான மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று தரிசனம் செய்​தனர்.

நீர்​நிலைகளுக்கு செல்ல முடி​யாதவர்​கள் வீட்​டிலேயே அம்​மனுக்கு பூஜை செய்து வழிபட்​டனர். வீடு​களில் கூழ் தயாரித்​து, பொது​மக்​களுக்கு வழங்​கினர். தவிர, ஞாயிறு விடு​முறை நாள் என்​ப​தால், கடற்​கரை,ஆறு, குளம் உள்​ளிட்ட நீர்​நிலை பகு​தி​களில் மக்​கள்​ கூட்​டம்​ அதி​கம்​ காணப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x