Published : 01 Aug 2025 05:54 AM
Last Updated : 01 Aug 2025 05:54 AM

பழமையான கோயில்களில் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஜீயர் கருத்து

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானத்தில் பொருத்தப்பட உள்ள தங்கத் தகட்டில் தங்க இலைகளை ஒட்டிய வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்.

திருப்பத்தூர்: பழமை​யான கோயில்​களில் ஆகம விதி​முறை​களுக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும் என்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரு​கே​யுள்ள திருக்​கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெரு​மாள் கோயி​லில் அஷ்​டாங்க விமானத்​துக்கு தங்​கத் தகடு பதிக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

3 தளங்​கள் கொண்ட இந்த விமானத்​தில் தங்​கத் தகடு பதிப்​ப​தற்​காக 18 ஆண்​டு​களுக்கு மேலாக தங்​கம் சேகரிக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு நவ. 14-ம் தேதி தங்​கத்தகடு பதிக்​கும் பணி தொடங்கியது. இந்​நிலை​யில், திருக்​கோஷ்டியூர் கோயிலுக்கு நேற்று வந்த ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், அஷ்​டாங்க விமானத்​தில் பொருத்​தப்பட உள்ள தங்​கத் தகட்​டில் தங்க இலைகளை ஒட்​டி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலை​யத் துறை செயல்​பாடு​களில் எனக்கு குறை ஒன்​றும் தெரிய​வில்​லை. நாம் ஒற்​றுமை​யாக சாமி கும்​பிட்​டால் தகராறு வராது. அரசும் கோயில் விவ​காரத்​தில் தலை​யி​டாது. நமக்​குள் தகராறு ஏற்படுவதால், கோயில்​களை அரசு எடுத்​துக் கொள்​கிறது.

கடவுள் இல்லை என்று சொல்​லக் கூடிய​வர்​கள், அதிக கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடத்​தி​யதை எண்ணி மகிழ்ச்​சிடைய வேண்டும். இதன் மூலம் அவர்​களுக்​கும் கடவுள் நம்​பிக்கை இருக்​கிறது என்​பதை கடவுள் நிரூபித்​துள்​ளார். பழமை​யான கோயில்களில் ஆகம விதி மற்​றும் நடை​முறைக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும். அவர​வர் இஷ்டத்​துக்கு கட்டப்படும் தனி​யார் கோயில்​களில் யார் வேண்​டு​மா​னாலும் அர்ச்​சக​ராகலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x