Published : 28 Jul 2025 05:30 AM
Last Updated : 28 Jul 2025 05:30 AM

கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்: மிளகாய் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன்

மிளகாய் சாந்து கரைசலில் குளித்த பக்தர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: கொரட்​டூர் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோயி​லில் ஆடி திரு​விழா கோலாகல​மாக நடந்து வரு​கிறது. இதையொட்​டி, பால் குடம் எடுத்​து, மிள​காய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்​தர்​கள் நேர்த்தி கடன் செலுத்​தினர். கொரட்​டூர் டிஎன்​எச்பி குடியிருப்பு 47-வது தெரு​வில் ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் கோ​யில் அமைந்​துள்​ளது.

சுமார் 50 ஆண்​டு​களுக்கு முன் புற்​றும், வேப்பமர​மும் மட்​டும் அமைந்​திருக்க, நாகவல்​லியை இங்கு பிர​திஷ்டை செய்​து, பக்தர்கள் வழிபட்​டனர். பக்​தர்​களின் வேண்டுதல்கள் கைகூட, பின்​னர் கோயி​லாக உருபெற்​று, ஓம்​சக்தி நாகவல்லி அம்​மன் அருள்​பாலித்து வரு​கிறார்.

சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில்
ஆடித்திருவிழாவை முன்னிட்டு,பால்குடம் ஏந்தியும்,
அலகு குத்திக்கொண்டும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

வேண்​டு​வோருக்கு வேண்​டும் வரங்​களை அள்​ளித் தரும் நாகவல்லி அம்​மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்​து, அப் பலன் பெற்​றுச் செல்​வோர் உண்​டு. இக்​கோயி​லில் தற்​போது ஆடித் திரு​விழா கோலாகல​மாக நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ஆடி மாத இரண்​டாவது வார திரு​விழாவை முன்​னிட்டு சுமார் 1,500 பக்​தர்​கள் பால்​குடம் எடுத்​தும், அலகு குத்தியும் நேற்று நேர்த்​திக்​கடன் செலுத்​தினர்.

மேலும், 500-க்கு மேற்​பட்ட பக்​தர்​கள் மாலை​யில் தீ மிதித்​தும், சிலர் மிள​காய் தூள் சாந்து கரைசலில் குளித்​தும் நேர்த்தி கடன் செலுத்​தினர். தொடர்ந்​து, எலுமிச்​சை, செவ்​வாழை, ஆப்​பிள், சாத்​துக்​குடி, தர்​பூசணி, அன்​னாசி உள்​ளிட்ட பழங்​களால் அலங்​கரிக்கப்​பட்ட, நாகவல்லி அம்​மனின் திரு​வீதி ஊர்​வலம் நடை​பெற்​றது. இவ்​விழா​வில், கொரட்​டூர், அம்​பத்​தூர், பாடி சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு அம்​மனை வழிபட்டு சென்​றனர்.

இதே​போல், மயி​லாப்​பூர் முண்​டககண்ணி அம்​மன், கோல​விழி அம்​மன், பிராட்வே காளி​காம்​பாள், பாடி படவேட்​டம்​மன், வில்லிவாக்கம் பாலி அம்​மன், சூளை அங்​காளம்​மன், கீழ்​பாக்​கம் பாதாள பொன்​னி​யம்​மன், ஈஞ்​சம்​பாக்​கம் கவுரி​யம்​மன் கோயில் உள்​ளிட்ட அம்​மன் கோயில்களில் நேற்று பக்​தர்​கள் கூழ் வார்த்​தும்​, பொங்​கலிட்​டும் அம்மனை வழிபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x