Published : 16 Jul 2025 05:55 AM
Last Updated : 16 Jul 2025 05:55 AM

மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

தேனி: ​மா​தாந்​திர பூஜைக்​காக சபரிமலை​யில் இன்று மாலை ஐயப்​பன் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, 12-ம் தேதி பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 13-ம் தேதி நவக்​கிரக கோயில் புனர்​பிர​திஷ்டை மற்​றும் கும்​பாபிஷேகம் நடை​பெற்​று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், மாதாந்​திர வழி​பாட்​டுக்​காக இன்று (ஜூலை 16) சபரிமலை​யில் நடை திறக்​கப்பட உள்​ளது.

மாலை 5 மணிக்கு தந்​திரி​கள் கண்​டரரு ராஜீவரு, பிரம்​மதத்​தன் ராஜீவரு ஆகியோர் தலை​மை​யில், மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி நடையை திறந்து வைக்கிறார்.

நாளை அதி​காலை​யில் இருந்து தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்​று, 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​படும். நிறைபுத்​தரி பூஜைக்​காக 29-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு ஒரு​நாள் வழி​பாட்​டுக்​குப் பின்பு 30-ம் தேதி இரவு நடை சாத்​தப்​படும்.

தற்​போது தென்​மேற்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ள​தால் சபரிமலை​யில் பக்​தர்​கள் குடை, மழை கோட் உள்​ளிட்ட பாது​காப்பு முன்​னேற்​பாடு​களு​டன் வரு​மாறு தேவசம்​போர்டு கேட்டுக்​கொண்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x