Published : 16 Jul 2025 05:55 AM
Last Updated : 16 Jul 2025 05:55 AM
தேனி: மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக கடந்த 11-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, 12-ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 13-ம் தேதி நவக்கிரக கோயில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், மாதாந்திர வழிபாட்டுக்காக இன்று (ஜூலை 16) சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளது.
மாலை 5 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
நாளை அதிகாலையில் இருந்து தொடர் வழிபாடுகள் நடைபெற்று, 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். நிறைபுத்தரி பூஜைக்காக 29-ம் தேதி நடை திறக்கப்பட்டு ஒருநாள் வழிபாட்டுக்குப் பின்பு 30-ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.
தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்கள் குடை, மழை கோட் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் வருமாறு தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT